கல்யாணி ஷங்கர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கல்யாணி ஷங்கர் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 57 |
புள்ளி | : 3 |
ஓசையின்றி மெதுவாய் தென்றல் தீண்ட,
படபடக்கும் இறகுகளைவிட இலேசாகிவிட்ட,
பளபளக்கும் தங்ககாசுகளாய் மஞ்சள் இலைகள்,
திகுதிகுவென்று பாரம் கூடியதுபோல்,
மடமடவென்று கிளைகள் விட்டு பிரிய,
சலசலவென்று சப்தத்துடன் தங்க மழை பொழிகிறது,
பரபரவென்று பரந்துகிடக்கிற மஞ்சள் பூமியின் மேல்,
சரக்சரக்கென்று நடக்கும் கால்கள் எழுப்பும் ஓசையுடன்!
தேடுகிறேன், தேடுகிறேன் - இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்.
எப்படி தொலைத்தேன்?
எப்பொழுது தொலைத்தேன்?
எங்கு தொலைத்தேன்?ஏன் தொலைத்தேன்?
அறிந்தே விட்டுக்கொடுத்தேனா?
இதை தொலைத்து வென்றது எதை?
பந்தமா? பாசமா? சுற்றமா? - அல்லது
பயமா? வெறுப்பா? சோர்வா?
தொலைத்த காரணம் யோசித்தால்,
பக்குவம், காலம், விதி என்கிறது மனம்.
தோற்றம் தொலைவது விதியினால், காலத்தால் - ஆனால்
உள்ளம் தொலைவது? பக்குவத்தினாலா?
என் உள்ளம் கொண்டதை பக்குவம் திருடியதா?
என்னுள் இருந்த அந்த இளம் பெண் எங்கே?
அந்த வீர பெண் எங்கே?
அந்த சாதனை பெண் எங்கே?
தொலைந்தது தெரியாமல் தொலை தூரம் வந்து விட்டேன்!
யோசிக்கிறேன்! இல்லை!
தேடுகிறேன், தேடுகிறேன் - இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறேன்.
எப்படி தொலைத்தேன்?
எப்பொழுது தொலைத்தேன்?
எங்கு தொலைத்தேன்?ஏன் தொலைத்தேன்?
அறிந்தே விட்டுக்கொடுத்தேனா?
இதை தொலைத்து வென்றது எதை?
பந்தமா? பாசமா? சுற்றமா? - அல்லது
பயமா? வெறுப்பா? சோர்வா?
தொலைத்த காரணம் யோசித்தால்,
பக்குவம், காலம், விதி என்கிறது மனம்.
தோற்றம் தொலைவது விதியினால், காலத்தால் - ஆனால்
உள்ளம் தொலைவது? பக்குவத்தினாலா?
என் உள்ளம் கொண்டதை பக்குவம் திருடியதா?
என்னுள் இருந்த அந்த இளம் பெண் எங்கே?
அந்த வீர பெண் எங்கே?
அந்த சாதனை பெண் எங்கே?
தொலைந்தது தெரியாமல் தொலை தூரம் வந்து விட்டேன்!
யோசிக்கிறேன்! இல்லை!