Rajakavi Rahil - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Rajakavi Rahil |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 2 |
மௌனம் எழுப்புகின்ற நீரொலி
மறந்து விடு
என்ற போது
இன்னும் உயிர்த்தது
என் காதல்
மழை நேரம்
முகம்
தலை மறைத்து
குடையுடன் வந்தாய் நீ
காற்று
பறித்துச் சென்றது
குடை
உன் முகம் பார்த்த
திருப்தியோடு
உன் கவிதை
ரசித்தேன்
அதில்
நான்
இல்லையென்று
தெரிந்தும்
ஒரு பறவை கால்களில்
என்
காதல் வைத்து
அனுப்பினேன்
திரும்பிவந்தது பறவை
கால்களின்றி
கேட்காமல் தந்தாய்
கண்ணீர்
கேட்டும்
நீ தராதது
காதல்
உன்னை
நினைக்கும் போது
தொடர்ந்து எழுதுகிறது
மை தீர்ந்த
பேனா
சொல்
எந்தக் கொல்லனிடம்
நான்
செல்ல வேண்டும்
உன் இதயம்
திறக்கக் கூடிய
சாவி
உயிரில் வடிகின்ற தென் .
கடல் ஆழம் என்கிறார்கள்
சங்கச் செய்யுட்கள் படிக்காதவர்கள் .
ஆல மர ஆணி வேரே காழ்ப் புணர்ச்சி கொள்ளும்
தமிழ்க் காவியங்கள் கண்டு .
தமிழ்ச் சொற்கள் எடுத்து
கள்ளிச் செடியில் தூவினேன் அடடா என்றன ரோஜாப் பூக்கள்
அதன் அழகு பார்த்து .
தமிழில்
காதல் கவிதைகள் படித்து விட்டு தண்ணீர் குடித்தேன்
அது இனித்தது தேனை வென்று .
சேவல் இன்னும் கூவுகிறது
ஒரு நாள் தமிழில் கூவுவேன் என்ற எதிர் பார்ப்புடன் .
தேனீக்களின் பிரார்த்தனை
செடியில் பூக்களுக்குப் பதிலாக தமிழ் பூக்க வேண்டுமாம் .
தமிழ் பேசும் இல்லம் என்று முத்துக்கள் அறிந்தால்
மறுக்கும் கடலில் விளைய .