வினோ பாரதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வினோ பாரதி
இடம்:  ஜெகதேவிபாளையம்
பிறந்த தேதி :  17-Feb-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Apr-2020
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  23

என்னைப் பற்றி...

மண் வாசம் போல் தமிழ் என்னுள் நுகா்கிறது...

என் படைப்புகள்
வினோ பாரதி செய்திகள்
வினோ பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2024 7:59 pm

கடலலைகள் கரைசேர்ந்தாலும் ஓய்வதில்லை !!
அதுபோல உன் நினைவலைகள் ஓய்வதில்லை !!
உன்னை தாங்கிய நெஞ்சத்தில் !!!
கனவுகள் காணும் இரவுகள் தான்
என் தோளில் உன்னை சேர்கிறது !!!
கரையும் மேகங்கள் தான் மண்ணிற்கு
அழகான உறவுகளை தருகிறது !!!
கரையும் நம் இதயங்கள் தான்
நம்மை பிரியாமல் சேர்கிறது !!!
ஆயிரம் தடயங்கள் மறைந்தாலும்,
நம் இணைந்த தடயங்கள் மறைவதில்லை!!!

மேலும்

வினோ பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Sep-2023 7:42 pm

பலநூறு
கண்ணீர்க்கு சமம்
உன்னுடைய
நூறாவது வெற்றி

மேலும்

வினோ பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2021 7:27 pm

விண்ணும் மண்ணும் வியர்க்கும்
கண்ணும் காதும் அறியும்
கீழடியும் நம்மை புகழும்
கிழக்கு திசையும் போற்றும்

கால்நடையாய் வானெங்கும் நடந்து
கம்பு ஊன்றி நின்றான்
கடலையும் கடந்து வென்று
கண்டமெல்லாம் தமிழை பதித்தான்

மதங்களை ஏங்கே கண்டோம்
சாதிகளை ஏங்கே அறிந்தோம்
கண்மூடி நின்றால் கானலாய்
தேசமெல்லாம் இருண்டு கிடக்கும்

விழித்தெழு தமிழா தேசமெல்லாம்
கயவா்களின் பிடியிலிருந்து மீண்டெழ
விழித்தெழு தமிழா தேசமெல்லாம்
அடக்கிய கரங்களை அடக்கிட

மேலும்

வினோ பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2021 8:53 am

“சித்திரையின் சித்திரமே”
சித்திரையின் சித்திரமே
கவியின் காவியமே
கவிகம்பன் வீட்டு
கவிபாடும் கட்டுதறியே!!!

ஆதவனின் அவதாரத்தை
அண்டம் வியா்த்திருக்க
முல்லையில் முளைத்த
பொற்கொடி சிலையே!!!

சித்திரை வெயிலில்
சில்லென்று வீசும்
தென்மேற்கு காற்றே!!!
நற்கரும்பு சாராய்
நன்பசு பாலாய்
கனியிடை சுலையாய்
பனிமலா் தேனாய்
பிறந்திட்டாய் சித்திரையிலே!!!

காலைபொழுது மாலைபொழுது
எப்பொழுதும் உன்பொழுது
இனி என்வாழ்வில்

கோபத்துக்கு சொந்தமே
பாசத்துக்கு பந்தமே
என்னுயிர் நாடியே.!!!
இருபத்திரண்டாம் ஆண்டு
அகவை காணும்
அன்ன பறவையே!!!
வாழ்வாங்கு வாழ்க
வாழும் நாளில்
“என் இம்சையோடு மகிழ்க”

மேலும்

வினோ பாரதி - வினோ பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2020 7:59 am

“நானும் எந்தையும்”

நெருக்கமில்லாதவன்
நெருங்கிடமாட்டானா!!
ஏக்கத்தோடு தவித்தேன்..
உழைத்து…
உழைத்து…
சிவந்த கரங்கள்
என்னை
அரவணைக்கும் போது
என்னைவிட்டு செல்லாதே
என நான் கதறினேன்… …
உறவாடும் பொழுது
சிறிதெனினும்
களவாடி சென்றாய்
என் புன்னகையை…
நிலவை காட்டி
சோறு ஊட்டினாள்
அன்னை…
அன்று தெரியவில்லை
நிலவுதான் நீயென்று…
நான்
தவழும் போது
சுமந்து சென்றாய்… .
விழும் போது
தாங்கி நின்றாய்..
உன்
தியாகத்திற்கு ஈடு
என் புன்னகையென்று
நினைத்திருந்தாயோ!!!
உன்
சொல் கேட்காமல்
நான் செய்வதெல்லாம்
தவறென்றுணா்ந்தேன்..
உன்னை
மதியாமலிருந்த
காலங்களெல்லாம்
மதிகெட்டிருந்தேன்

மேலும்

வினோ பாரதி - Piyu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2020 5:04 pm

தினம் உதிரும்
பூவாக நீயிருந்தாலும்
நித்தமும் அதில்
உனைத் ...
தாங்கும் காம்பாக
நான்னாகவே

வண்ணங்ளாக
நீயிருக்க
தூரிகையாக
நான் மாறிட
ஓவியங்களும்
உயிர் பெற்று
வாழ்ந்திடுமே !...

ஓவியம் போல்
நீயிருக்க ....
அதில் ஒளிந்திருக்கும்
கருப்பொருளாக
நான் இருப்பேன்

மீனாக
நீயிருந்தால்
நீ .... நீந்தும்
நதியாக
நானாவேன்

காற்றாக
நீயிருந்தால்
உன்னில்
கலந்த
மின்அலை
நானாவேன்

முற்று பெறாத
புள்ளியாக
நீயிருந்தால்
உன்னிடத்தில்
அழியாத
கோலங்களாக
நான் மாற்றுவேன் .

🌼🙏🌼

மேலும்

மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றிகள் சகோதரரே நீங்கள் வாசிதாது கருத்தினை பகிர்ந்தமைக்கு 🙏 12-Apr-2020 3:47 pm
.....முற்றுப்பெறாத புள்ளியாக நீ... உன்னிடத்தில் அழியாத கோலங்களாவேன் நான்..... நான் ரசித்த வரிகள் அருமை சகோதரி பியூ 11-Apr-2020 6:18 pm
வினோ பாரதி - வினோ பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2020 5:37 pm

கண் விழித்து பாா்த்தேன்
இரைச்சலான நகரம் -இப்போது
அமைதியான பூவனமானது…

வந்திருப்பது யாதென்றும் தெரியாது
நினைத்துக்கூட பார்க்காத – மாற்றத்தைக்
கொடுத்துவிட்டது… ..

மனந்தளா்ந்த இயற்கை
விழித்துக் கொண்டது – காற்றில்
மாசு குறைந்துவிட்டது…

இயற்கையே நாடிச் சென்றிடு
இயற்கையோடு ஒன்றிணைந்திடு
கொரோனாவை ஒழித்திடு. …

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே