ராதா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராதா
இடம்
பிறந்த தேதி :  20-Mar-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Mar-2011
பார்த்தவர்கள்:  67
புள்ளி:  4

என் படைப்புகள்
ராதா செய்திகள்
ராதா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2024 8:12 pm

உன் சின்னச் சின்னத் தீண்டல்களில்
என் தூக்கம் கலைக்கிறாய்!
நித்தமும் என் நித்திரை தொலைக்கச் செய்கிறாய்,
உன்னை அலட்சியம் செய்தாலும் ,
பற்கள் பதித்தே என்னைப்
புரட்டிப் போடுகிறாய் !
என் காதோரத்தில் வந்து கதை பேசுகிறாய் !
விடியும் வரை தொல்லை செய்து
விடிந்த பின்பே என்னை உறங்கச் செய்கிறாய் !
--இரவெல்லாம்... கொசு !

மேலும்

ராதா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2024 8:06 pm

வானம் பாத்து கெடந்தோம்,
வருசம் பூரா விரயப் பட்டோம்...!
முப்போகமும் வெளஞ்ச பூமி,
முழுசா தருசா போனதய்யா !
பண்ணையாரிடம் பட்ட கடன்,
பல மடங்கா ஆனதய்யா !
பட்ட கடனுக்கு, தாரை வார்த்தேன்,
புள்ளையா வளத்த நிலத்தை!
ஊருக்கு சோறு போட்ட உழவன் நான்,
இப்போ கூலிக்கு கஞ்சி குடிக்கிறேன்!
வழி தவறிப் போன புள்ளையா- என் நிலம்,
பண்ணையாரிடம் போய், பல மாடியாகிப்போச்சு!
வானம் பொய்த்ததாலே, மானம் கேட்டு போனேன்,
மருகி மருகி தேடினாலும், நான் வர மாட்டேன்..!
இனி நானும் ஒரு அருகும் உயிரி தான்..!
- உழவன்

மேலும்

ராதா - ராதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2022 1:16 pm

நான் செல்லும் வழியெங்கும்
எனக்காக காத்திருக்கின்றன
-- உன் விழிகள் !

நமக்கான மாலை நேரத்தில்
தனித்து விடப்பட்டுள்ளன
-- உன் தேனீர் கோப்பையும், நாற்காலியும் !

இப்போதெல்லாம் வழக்கு மொழியாக
மாறிவிட்டது - மௌனம் !

நடை பயணத் துணையாய்
நீ இருந்த இடத்தில், இப்போது
- என் நிழல் !

சின்னச் சின்ன சண்டைகளில்
பெருகிய நம் காதலில்...

முகவரி தொலைத்த பறவையாக - நான்!
உன் நினைவுகளில் எழுதிக் கிழித்த
காகிதத் துண்டுகள் போல !

மேலும்

ராதா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2022 1:16 pm

நான் செல்லும் வழியெங்கும்
எனக்காக காத்திருக்கின்றன
-- உன் விழிகள் !

நமக்கான மாலை நேரத்தில்
தனித்து விடப்பட்டுள்ளன
-- உன் தேனீர் கோப்பையும், நாற்காலியும் !

இப்போதெல்லாம் வழக்கு மொழியாக
மாறிவிட்டது - மௌனம் !

நடை பயணத் துணையாய்
நீ இருந்த இடத்தில், இப்போது
- என் நிழல் !

சின்னச் சின்ன சண்டைகளில்
பெருகிய நம் காதலில்...

முகவரி தொலைத்த பறவையாக - நான்!
உன் நினைவுகளில் எழுதிக் கிழித்த
காகிதத் துண்டுகள் போல !

மேலும்

ராதா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2021 10:36 pm

பொட்டல் காட்டில் பொறந்த பொண்ணுத் தாயீ!
ஒம் பொறப்பு சொல்லும் கதை என்ன சொல்லு தாயீ!
அத்துவானக் காட்டுக்குள்ள,
அரவமில்லா ஊருக்குள்ள,
அலறல் சத்தம் கேட்குதய்யா!
அண்டமும் அதிருதய்யா!
அழுது அழுது மாஞ்சு போனேன்,i
மானம் போனதுல உசிரு
தேஞ்சு போனேன்!
செத்த ஒடம்ப படம் புடுச்சு,
சேதிகள் பல பேசி,
இணையத்தில வலம்
வருவேன்னு நினைக்கல !
என்னய உருக்குலைச்ச பயலுக,
ஊருக்குள்ள ஏமாப்போட சுத்தையில
பாக்க மனசு சகிக்கல!
கீழத்தெரு பொண்ணா,
நான் பொறந்ததால ,
-கேக்க நாதி இல்ல,
நாய் கூட மதிக்கல...!
நீதி மட்டும் கேட்டு என்ன செய்ய ..?!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே