thulam - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : thulam |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 73 |
புள்ளி | : 8 |
ஆதிவாசி ஆதாம் ஏவாள் முதல்
ஆதிக்க ஏவலிடும் அறிவியல்வாசி வரை
தாங்கி தாங்கி சுழலும் பூலோகமே
வாழ்துக்கள் உமக்கு எம் வாழ்த்துக்கள்
இனிய 2014 பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கண்டங்கள் பலவொரு மேனி பாகங்கள்
பூமத்தியம் மண்டல நரம்பு கோர்வைகள்
மையத்து புவியீர்ப்பு தேகத்து உயிர்த்துடிப்பு
துடிப்போட, நான்கில் மூன்று நீர்நிலைகள்
திரண்ட பசுமை வற்றிடா நிறைவூற்று
சுழன்று சுற்றுமுனை சுற்றி உயிர்காற்று
காலம் உருண்டோட வருடம் சேர்ந்தோட ;
கூடுவது முதுமையல்ல, பாரம்பரிய தொன்மை
வயதேற இளமை எழில்கூடும் வரமுமது
வணங்கி வாழ்த்து விளம்பிடும் சிரமெமது
முதலாளி: பவர் இருந்தா யார் வேணும்னாலும் பெரியாளாயிடலாம்
தொழிலாளி: எனக்கும் பத்து வருசமா பவர் இருக்கு நான் பெரியாள் ஆகவே இல்லையே
முதலாளி: என்னடா சொல்ற?!
தொழிலாளி: என் கண் பவரத்தான் சொல்றேன் என்றான் அப்பாவியாக கண் கண்ணாடி காட்டியவாரே!
கிராமங்கள் கரைந்து நிறுவனங்கள் வந்திட்டு
விவசாயம் இளைத்து விலைவாசி ஏறிட்டு
விளைநிலம் சுருங்கி விண்மாடி விளைந்திட்டு
ஆகாயம் குறுகி ஆலம்பழம் ஆகிட்டு
பூலோகம் நெருங்கி கணினியில் போகிட்டு
உழைப்பு நொறுங்கி நிர்வாகம் விரிந்திட்டு
தேவைகள் பெருகி போகம் பெருகிட்டு
தெளிவை மௌனித்து மடமை பேசிட்டு
வயிரின் தேவையோ மாறாது நிலைத்திட்டு
உணவே, உடலில் ஓட்டத்தை ஓட்டிட்டு
வெம்பும் மனதில் சமாதான பாலிட்டு
சுழற்சியில் மலர்ச்சி வருமென நம்பிட்டு
மார்கழி போகையில் போகத்தை பொசுக்கிட்டு
உத்ராயணத்தில் உள்ளதை இல்லாரொடு பங்கிட்டு
உதவிடும் கால்நடை மங்கள மலரிட்டு
காணும்நாள், காக்கும் பூதங்களை கும்பிட்டு
இ
உண்மை காதல் இல்லை என்றால்....
உண்மையான கவிதைகள் இல்லை என்றா அர்த்தம்...?