vijayapriya - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vijayapriya
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Dec-2017
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  0

என் படைப்புகள்
vijayapriya செய்திகள்
vijayapriya - தாரா கவிவர்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2017 3:59 pm

இவ்வுலகினில் பெண்டிராய் பிறந்திடா
மாதவம் புரிதல் வேண்டும்..!
கற்பின் சிறப்பை வெளிக்கொணரா
மதுரை எரித்தவளும் பெண் தான்..!
உயிர் எழுத்துக் கொண்டு மனிதறம் பற்றி
ஏட்டினில் ஏற்றியவளும் பெண் தான்..!
விலைமாதர்கள் என விலைபேசி விற்ற
நிலை முற்றிழித்தவளும் பெண் தான்..!
பெண்ணியம் பேசிட வைத்த பாரதியைப்
பெற்று எடுத்தவளும் பெண் தான்..!
வானில் பூக்கும் விண்மீன்கள் பறிக்க
விண்ணில் கால்வைத்தவளும் பெண் தான்..!

பெண்மை போற்றுவோம்..!

மேலும்

நன்றி தோழி... 27-Dec-2017 12:52 pm
அற்புதம் தோழரே . 27-Dec-2017 9:57 am
மிக்க நன்றி தோழர் 26-Dec-2017 7:08 pm
உண்மை தோழரே 26-Dec-2017 5:20 pm
vijayapriya - எண்ணம் (public)
26-Dec-2017 5:38 pm

என் வாழ்க்கையில் ஒரு காதல் கதை :
    என் பெயர் பிரியா .அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு காதல் கதைகள் வந்து போகும் அது போல் என் வாழ்க்கையிலும் வந்தது .பொதுவாக ஆண்கள் தான் இது போன்ற கதைகள்
சொல்லுவாங்க ஆனால் இது ஒரு பெண் எழுதுகிற கதை .
அவன் பெயர் வருண்,
நான் என் கல்லூரியில் 2 வது வருடம் படிக்கும் போது  என் வகுப்பறையின் பக்கத்துக்கு  வகுப்பறையில் முதலாம் ஆண்டு படித்து வந்தான் வருண் .வருண் அழகா இருப்பான் .

நான் செல்லும்  வழிகளில் எல்லாம்  எங்காவது நின்று என்னை பார்ப்பான் வருண்.

ஒரு சில நாட்களுக்கு பிறகு அவனது நண்பர்கள் நான் அவன் வகுப்பறை வழியாக செல்லும் போதெல்லாம் அவன் பெயரை வைத்து என்னை அழைத்து  வந்தனர் .

நீண்ட காலமாக என்னைத்தான் இப்படி அலைகிறாள்கள் என்று எனக்கு தெரியவில்லை .

ஒருநாள் வருண் கல்லூரிக்கு வரவில்லை.

அவன் அவன் நண்பர்களிடம் என்னை காதலிப்பதாக கூறி இருக்கிறான் .

அவன் வராத அந்த நாள் அவனது நண்பன் என்னிடம் வந்து .

"வருண் உன்னை காதலிக்கிறான்" என்று கூறி  சென்று விட்டான்.

நானும் அவன் கூறியதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை .

மறுநாள் வருண் கல்லூரிக்கு வந்தான் வழக்கம் போல் அவன் வகுப்பறையின் வாசலில் நின்று என்னை  பார்க்கும் வேலையை தொடங்கினான்.

இப்படியாக இரண்டு  வருடங்கள் கடந்தன .நானும் எனது படிப்பை முடித்து விட்டு கல்லூரியை விட்டு வெளியில் பணிக்கு வந்து விட்டேன்.

வருண் பற்றிய எந்த தகவலும் 2 வருடமாக இல்லை .பின் வருணின் நினைவுகள் மறக்க தொடங்கினேன் .

இந்த இரண்டாவது வருட முடிவில் வருணிடம் இருந்து fb இல் friend request வந்தது.

நானும் அதை ஏற்று கொண்டு நல்ல நண்பராக பழகி வந்தோம் .

நாங்க நண்பர்களாக இருக்கும் போதும் , பேசும் போதும் அவன் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி விளையாடுவான் .

ஒருநாள் நன்றாக பேசி கொண்டிருக்கும் போது வருண் ,
"பிரியா உன்னை நான் காதலிக்கிறேன்" என்று கூறினான் .

நான் என் குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு வருணிடம்  ,
"வேண்டாம்  வருண்  நாம் நண்பர்களாகவே வாழ்ந்து விடுவோம்" என்றேன் .

அப்போது ,சிறிது கோபத்தில் ஈடுபட்ட வருண் .
"ஏன் என்னை வேண்டாம் என்கிறாய்  , இதற்கு தான் 2 வருடமாக காத்திருந்திருந்தேனா " என்று அல தொடங்கி விட்டான்.

எனக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை நானும் சில நாட்கள் வருணிடம் பேச வில்லை.

இப்போது வருண் என் சமதத்திற்காகவும் ,என் குடுத்து சமதத்திற்காகவும் காத்திருக்கிறான் .

நானும் அவனிடம் பேசுவதில்லை.அவனும் என்னிடம் பேசுவதில்லை .

இறுதிஇல்  எங்கள் மனம் ஒன்று சேரும் என்ற நம்பிக்கையில் இருவரும் இருக்கிறோம்.

தொடரும்...

Note : பெற்றோரின் ஆசீர் வாதமே கடவுள் கொடுத்த வரம்.
 









 

 

மேலும்

vijayapriya - எண்ணம் (public)
23-Dec-2017 3:04 pm

தலைப்பு : என் பள்ளி வாழ்கை .

என் பெயர் விஜய பிரியா.என் தோழிகள் மற்றும் என்னுடன் சேர்ந்து  ஐந்து பேர் .என்னது தோழிகளுக்கு என்னை மிகவும் பிடிக்கும் .நாங்கள் 6 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்து வந்தோம் .எங்கள் வகுப்பறையில் நாங்கள் ஐந்து பெயர் மட்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம் .என்ன நடந்தாலும் பெரிதாக எடுத்து கொள்ளாமலும் மகிழ்ச்சியாக படித்து வந்தோம் .சிறு சிறு சண்டைகள் மற்றும் சில மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஓரிரு நாட்களில் அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியாக வளர்த்தோம்.எங்கள் பள்ளி நாட்களில் எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும் ,நல்லது நடந்தாலும் அதுக்கு முதல் காரணமாகவும் முனிடத்திலும் நானும் எனது தோழிகளும் இருந்து வந்தோம்.இதில் சிறு காதல் கதைகள் வேறு என் தோழிகளுக்கு . எப்படியோ 10 ஆம் வகுப்பு முடித்து 11 ஆம் வகுப்பு தொடங்கியது அந்த நேரத்தில்  தான் எங்கள் 10 ஆம் வகுப்பு கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியைகள் எங்களிடம் மிக நெருங்கிய  நண்பர்கள் போல் பழக ஆரம்பித்தனர்.இவர்கள் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பழகுவார்கள் எனக்கு ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் .இப்படியே 11 ஆம் வகுப்பு முடித்து 12  ஆம் வகுப்பு தொடங்கியது என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது .என் வாழ்க்கையில் புது தோழி ஒருத்தி அறிமுகம் ஆனால் .அப்போது இதுவரை எனக்கு பிடித்த மற்றும் என்னிடம் பேசி பழகி விளையாண்ட என் தோழிகள் மற்றும் என் ஆசிரியர்கள் என்னை விட்டு விலக தொடங்கி விட்டார்கள் .அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை .ஒரு பக்கம் எனக்கு மிகவும் பிடித்த நீண்ட நாள் பழகிய உறவுகள் மறுபக்கம் என் புதிய தோழி .இது வரை என் பள்ளி வாழ்க்கையில் இருந்த அணைத்து சந்தோஷங்களும் என்னை விட்டு விலகி சென்றன .முடிவில் என் மனதை புரிந்து கொண்ட என் தோழிகள் என்னை விட்டு சொல்லாமல் நீ சந்தோசமா இருந்தால் போதும் என்றும் என்னை சந்தோசமா வைத்து கொண்டனர் .இறுதியில் எங்கள் பள்ளி வாழ்கை முடிந்து ஒவ்வருவரும் ஒவ்வரு பக்கம் சென்று விட்டோம் .இருந்தும் எங்கள் பாசம் எப்போதும் குறையாமல் எங்கள் வால் நாளில் ஒரு நினைவாக வாழ்ந்து கொண்டிருக்கு .

குறிப்பு : நண்பர்கள் கிடைப்பதல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
               என் நண்பர்கள் எனக்கு கிடைத்த வரம் .

மேலும்

படுச்சுட்டேன் விஜி நல்ல இருக்கு. 26-Dec-2017 12:00 pm
மலரும் நினைவுகள் இளமைக் காலம் பள்ளி அனுபவங்கள் நட்பியல் படைப்புக்கு பாராட்டுக்கள் 24-Dec-2017 3:39 am
கருத்துகள்

மேலே