எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.


பதில் சொல்லடி

மைவிழியால்
மனம் மயக்கி
போறவளே உன்
மந்தகாச புன்னகையில்
ஏதோ மந்திரம் உள்ளதடி அது
என் மதிமயக்கி உன் 
பின்னே சுற்ற வைக்குத்தடி
கண்டும் காணாமல் நீ
போகையிலே என் 
மனம் கலங்குதடி
எனை ஏறெடுத்து
ஒரு முறை பாரடி 
பெண்ணே இந்த 
பாரையும் உனக்காய் 
பரிசளிப்பேன் உன்
அருகாமையில்
ஊனும் உறக்கமும் 
தேவையோ எனக்கு
உன் பாதி இனி
என் உயிரின் பாதியென 
உணர வைக்கிறாயடி
உன் உருவம் என் 
முன்னே உலா வரும்போதெல்லாம் - உனை 
பார்க்கா நொடிகல்லெல்லாம்
பரிதவிக்கும் என் 
பாழாய் போன மனதிற்கு
பதில் சொல்லி செல்லடி....

மனோஜ்

மேலும்


மேலே