எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாண்புமிகு ஆசிரியர் அகரம் சொல்லிக் கொடுத்து ஆர்வமூட்டி இன்பமளித்து...

மாண்புமிகு ஆசிரியர்
அகரம் சொல்லிக் கொடுத்து
ஆர்வமூட்டி
இன்பமளித்து
ஈகையைக் கற்பித்து
உள்ளம் உவந்து
ஊன்றுகோலாய்
எழுத்தாணியாக
ஏர் போல் நடந்து
ஐயம் நீக்கி
ஒற்றுமையைப் பலமாக்கி
ஓதுவது ஒழியாது
ஔவை வழி நடத்தி
அக்கம் சுருக்காமல் நிலைத்த
பல்கலைக் கழகமாம் ஆசிரியர்
எனவே ,
ஆசிரியரைப் போற்றுவோம் !
கல்வியில் உயருவோம் !
மரியாதையை கற்றுகொள்வோம் !
வாழ்வில் வளம் பெறுவோம் !
என்றும் மாண்பு மிகு மாணவனாய்!

பதிவு : gokila
நாள் : 3-Sep-14, 3:03 pm

மேலே