எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மண் பயனுற வேண்டும் ... மாலை வணக்கம் தோழமைகளே...

மண் பயனுற வேண்டும் ... மாலை வணக்கம் தோழமைகளே .

முதலில் உங்கள் அனைவருக்கும் எமது நன்றியை உரித்தாக்குகிறோம் .போட்டிக்கு ஆதரவு தந்த , பங்கு பெற்ற , வாய்ப்பு அளித்த அத்துனை நல்லிதயங்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை குறைவே எனினும் அதை பணிவோடு , மிகுந்த மன நிறைவோடு , மேலும் ஆதரிக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு தெரிவித்துக் கொள்கிறோம் .மிக்க நன்றி அத்துனை தோழமைகளுக்கும் ....

தொடக்கம் முதலே அனைவரின் ஆதரவும் பங்களிப்பும் இருந்து வந்தது ... ஆனாலும் எங்களின் பேரில் அக்கறையும் நம்பிக்கையும் அளித்து பக்க பலமாய் இருந்த தோழமை ராம்வசந்த் அண்ணாவிற்கு எங்களின் பாசங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்...

போட்டி முடிவுகள் ...இதோ .

முதல் பரிசு - கவிதை எண் - 231781 - தோழர் மீ.மணிகண்டன்

இரண்டாம் பரிசு - கவிதை எண் - 232584 - தோழர் கற்குவேல் .பா

மூன்றாம் பரிசு - கவிதை எண் - 232459 - தோழர் மெய்யன் நடராஜ்.

சிறப்பு பரிசுகள் - இரண்டு பேர்

கவிதை எண் - 232539 - தோழர் - இணுவை லெனின்

கவிதை எண் - 232331 - தோழர் சர்நா

போட்டியின் முதல் கட்ட கவிதை தேர்வுகளை எங்கள் குழுவே செய்தது . இரண்டாம் கட்டத்திலும் , இறுதி தீர்ப்பிலும் தோழர் ஜின்னாவும் , தோழர் பொள்ளாச்சி அபி அவர்களும் எங்களுக்கு இசைவு தந்து அப்பணியை ஏற்றனர் .அவர்களுக்கு எம் பெரு நன்றியை செலுத்துகிறோம் . எங்கள் அனைவரின் கல்லுரி தேர்வு , படிப்பு , பணி ஆகியவற்றால் அவர்களுக்கு இரண்டு நாட்கள் முன்னம்தான் முதல் கட்ட தெரிவு கவிதைகளை அனுப்பினோம் .

சில வேலைகளை துறந்து , தள்ளி வைத்து அவர்கள் இந்த பணியை செய்தனர் என்று கேள்வி பட்டோம் .
மிக்க நன்றி நடுவர் தோழமைகளே.

மண் பயனுற வேண்டும் .செய்வோம் . சந்திப்போம் .

நாள் : 16-Feb-15, 8:11 pm

மேலே