எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதலிலிருந்து---2 ஆதாமின் தோளில் ஏவாள் சாய்ந்திருந்தாள். மண்வாசம் நாசியை...

முதலிலிருந்து---2

ஆதாமின் தோளில்
ஏவாள் சாய்ந்திருந்தாள்.
மண்வாசம் நாசியை
தழுவும் வரை
குளிர் காற்று
தேகம் தீண்டும் வரை
ஒரு பூ உதிர்ந்து
மேல் விழும் வரை
உடையற்றும் ஒன்றும் தோனவில்லை..

இப்போது
ஒரு முத்தம் தர
ஆதாம் எத்தனிக்க
அவர்களின் குழந்தை
முன்னே தவழ்ந்து வந்தது.

முதல் முறை
சிரிக்கப் பழகினார்கள்
முதல் மனிதனும்
முதல் மனுசியும்.
--கனா காண்பவன்

பதிவு :
நாள் : 5-Jun-15, 8:31 am

மேலே