எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாரத தேச மென்று பெயர்சொல்லுவார் ‍ - சுப்பிரமணிய...

பாரத தேச மென்று பெயர்சொல்லுவார் ‍ - சுப்பிரமணிய பாரதி


பாரத தேச மென்று பெயர்சொல்லுவார் - மிடிப்
பயங் கொல்லுவார் துயர்ப்பகை வெல்லுவார்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர் தங் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.

சாதி இரண்டொழிய வேறிலை யென்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்
நீதி நெறியினின்று பிறர்க் குதவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர்.

பதிவு : nalina
நாள் : 14-Aug-15, 12:35 pm

மேலே