" பீ...ஓர் ஆய்வு " இறைவனை ஒன்று எனக்...
" பீ...ஓர் ஆய்வு "
இறைவனை ஒன்று எனக் கூறுவது தவறு
ஒன்று என்ற சொல்லில் மூன்று எழுத்துகள் இருக்கின்றன
இறைவனை ஒரு (நிகரற்ற) எழுத்து ஒரு சொல் என்று கூறலாமோ
ஒரு எழுத்துகள் மூன்று உள்ளன ஈ... தீ... பீ...இதில்
ஒரு எழுத்து ஒரு சொல் இறைவன் எது ?
ஈ எனும் உயிர் மெய்யின்றி ஓர் உருவ சிறு பறவை
தீ அது தொட்டால் சுடும்...இதில் இருக்கும்
உயிர் உடல் மர்மம்... த்(வல்லின மெய் ) + ஈ
பீ அது தொட்டால் சுடாது...இதில் இருக்கும்
உயிர் உடல் மர்மம்... ப்( வல்லின மெய்) + ஈ (உயிர்)
குணத்தால் வேறுபட்டு
இனத்தாலும் உயிராலும் ஒன்றாய்
தீ மற்றும் பீ இரண்டும் ஒன்று தான்
இவைகளுக்கு உடல்(மெய்) உண்டு
உடல்(மெய்) இன்றி உயிரே உருவமாய் இயங்கும்
ஈ தான் பெருமையும் சிறப்பும் ஆகும்
அந்த ஈ அது பெய்யும் மலம் பீ ஆகும்
அந்த பீ இல்லா ஈ உண்டோ பரத்தில்...பரம்பொருளில்...
பீ அதுவே பரம் பொருளாய்
பரம் பொருள் அதுவே பீ அதாய்
ஓர் எழுத்து அதே ஒரு சொல்லாய் பீ அதை
ஒன்று தான் இறைவன் உண்டு தான் இறைவன் என்று
ஓரவஞ்சம் இன்றி ஒரு மனதாய் ஏற்கலாம்/கொண்டாடலாம்.