எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொறியாளனின் கண்ணீர் பள்ளி அறையில் சிறகடித்தோம் பொறியியல் பட்டப்படிப்பை...

 பொறியாளனின் கண்ணீர்                                                                                                                                  பள்ளி அறையில் சிறகடித்தோம் 


பொறியியல் பட்டப்படிப்பை தேர்ந்தெடுத்தோம்

கல்லூரி  வகுப்பில் சிறைபட்டோம் 

கண்ட கனவெல்லாம் கலைக்கப்பட்டோம் 

கொண்ட சந்தோஷங்கள் தொலைக்கப் பட்டோம்

துறைத் துறைகளாக பிரிக்கப்பட்டோம் 

கள்ளமில்லா நட்பிற்குள் விரிசல்பட்டோம் 

அறிவுப் பாதையில் ஒதுங்கி நின்றோம் 

அழிவுப் பாதைக்கு தேடி ஓடினோம் 

காலம் கடத்தியே நாட்களை விரையமாக்கினோம் 

ஆக மொத்தத்தில் வாழ்க்கையை வீணும் ஆக்கினோம் 





சரி கல்லூரி வாழ்க்கைதான் இப்படி என்றால் 

பிற மகிழ்ச்சிகள் என்ன ஆயிற்று என்றால்

ஏழரை சனி வாழ்வில் குடி கொண்டாள்

சுத்திச் சுத்தி அடித்துச் சென்றாள்





ஒரு பெண்ணைப் பார்த்ததும் கொண்டேன் காதல் 

அவளோ வெண்நிலவின் சாயல்

அவளோடு கொண்டேன் காதல் ஊடல்

சில நாளில் எல்லாம் கானல் 

அதனால் மனதில் ஏனோ ஒரு இடங்சல்






வாழ்வே தேடல் தேடல்

வேலைக்கு தினம் ஓடல் ஓடல் 

நிம்மதி நண்பனின் கூடல் கூடல்

தேடலிலே வாழ்க்கை கரையுமா

தேடித்தான் வாழ்க்கை விரியுமா

குழப்பத்தில் இன்று நானம்மா 

விடியலுக்கு காத்துருக்கிறேன் பாரம்மா..,.!!!!

பதிவு : Gokul Subramanian
நாள் : 11-Apr-16, 9:22 pm

மேலே