பாசத்துடன் பாரதிக்காக சுதந்திரப்போரை தமிழ்த்தாய் துணையுடன் நகர்த்தி தமிழ்...
பாசத்துடன் பாரதிக்காக
சுதந்திரப்போரை தமிழ்த்தாய் துணையுடன் நகர்த்தி
தமிழ் நெஞ்சில் விடுதலை சுடரேற்றிய சுதந்திர போராட்ட சூரியனே
நீ உதயமான அன்று ஆங்கிலேயன் அறியவில்லை ஒருநாள் நீ சுட்டெரிப்பாய் என்று
எழுத்தாணி கொண்டு எம்மக்களை எழுச்சியூட்டுவாய் என்று
பீரங்கிக்குண்டும் மீண்டு திரும்பியதே...! மிரண்டு நீ வடித்த வார்த்தைச்சுவடு கண்டு..
உன்னை என் கண்கள் காணவில்லை மனது உணர்கிறது
மாற்றம் ஏற்படுத்திய மகா கவியே
தமிழிருக்கும் வரை உன் புகழிருக்கும்
என்றென்றும் மக்கள் மனதில் நீ வாழ்க நின் புகழ் ஓங்குக,
வானளந்த வாத்தியாரே வணங்குகிறோம் உன்னை