எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

#மாதவிடாய்_நேரத்தில்_வலியில்_துடிக்கும்_பெண்ணை #தீண்டதகாத_ஒன்றாய்_நினைத்து_ஒதுக்கும்_சமுகமே_இதை_கொஞ்சம்_படி பெண்களுக்கு மாதத்தில் ஒரு முறை அதாவது...

#மாதவிடாய்_நேரத்தில்_வலியில்_துடிக்கும்_பெண்ணை #தீண்டதகாத_ஒன்றாய்_நினைத்து_ஒதுக்கும்_சமுகமே_இதை_கொஞ்சம்_படி 
பெண்களுக்கு மாதத்தில் ஒரு முறை அதாவது மூன்று நாட்கள் இரத்தப் போக்கும் ஏற்படுத்தும் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் உடல் மிகவும் சோர்வு ஏற்படுத்தும் இதை அறிந்து ஓர் காலத்தில் பெண்கள் தனது மாதவிடாய் நேரிடும் போது தனது உடலில் இருந்து அளவுக்கு அதிகமான இரத்தப் போக்கை ஏற்படுத்தும் அந்த சமயத்தில் பெண்களின் உடல் சோர்வு ஏற்பட்டு பழகினமாக மாறிவிடுவார்கள் ஆகையால் பெண்களை அந்த மூன்று நாட்களுக்கு எந்த வேலையும் செய்யவிடாமல் ஒய்வு எடுக்க சொல்வார்களாம் அதுவே சிறிது சிறிதாய் மாறி காலப்போக்கில் பெண்ணை அந்த மூன்று நாட்களில் தீண்ட தகாத ஒன்றாக சித்தரித்து விட்டது அதையே நடைமுறையும் படுத்துகிறது இச்சமுகம் .

இதில் மிகவும் வேதனைக்குரியது என்னவென்றால் இடை விடா இரத்தப் போக்கில் உடல் அளவில் வேதனையில் தவிக்கும் அந்த பெண்ணை மனதளவிலும் சிரமத்தை ஏற்படுத்தி இழிவு படுத்தி நாம் ஏன் பெண்ணாக பிறந்தோம் என்று என்னும் அளவிற்கு தள்ளப்படுகிறோம் இந்த நிலையில் ஆண் ஆகிய நாம் இருந்தால் என்ன செய்வோம் நமது கையில் இரு சிறு துளி இரத்தம் வந்தாலே துடிக்கும் நாம் மாதத்திற்கு ஒருமுறை அதாவது மூன்றுநாள் இரத்த போக்கில் தவிக்கும் அப்பெண்ணின் வலியை புரிந்துக்கொள் மனிதா ..
பாவம் என்ன செய்தால் அப்பெண் பெண்ணாய் பிறந்தது அவள் குற்றமா இல்லை இயற்கை உபதையில் சிக்க வைத்த கடவுளின் குற்றமா எதை சொல்வீர் குற்றம் என்று அந்த மாதவிடாய் நேரத்தில் இரத்த போக்கு ஏற்பட வில்லை என எத்தனையோ பேர் மருத்துவமனையை தேடி அழைகின்றனர் இயற்கையின் சூழலை யாராலும் மாற்றவும் முடியாது மாற்றியமைக்க வழியும்மில்லை அப்படி மாற்றி அமைத்தால் தாய்மை எனும் புனிதமே இல்லாமல் போய்விடும்

அப்பெண்ணிற்கு முதல் முறை மாதவிடாய் ஏற்படும் போது ஊரையே கூட்டி சந்தோஷம் பெறும் மனிதா இப்பொழுதாவது சற்று யோசித்து பார் தீண்டைமை ஒழித்து பெண்மையை காப்பாற்றி தாய்மையை போற்று இந்த நிகழ்வு அவமானமும் அல்ல இழிவும் அல்ல இயற்கையின் செயலே....

ஆக்கம் 
முஹம்மது ரியாஜூல்லா DDTP

பதிவு : RIyaj
நாள் : 26-Sep-18, 10:02 am

மேலே