எண்ணம்
(Eluthu Ennam)
இன்று தமிழுக்கு பிறந்த நாள்...
பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் நிறையும் பெண்மையும்
கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களைப் பொதுவாக மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என இருவகையில் அடக்குவர். எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரண்டும் மேற்கணக்காகும். கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம் பதினெட்டாகும். பாட்டு, தொகை நூல்களில் மேற்கணக்கு நூல்களை அடுத்துப் போற்றப்படுவது கீழ்க்கணக்கு நூல்களாகும். தமிழ்விடு தூது என்னும் சிற்றலக்கிய நூல்,
வார்த்தைகளின் வலிமை
நாம் பேசும் வார்த்தைகளுக்கு வலிமை, நினைக்கும் எண்ணங்களுக்கு எழுச்சி இருக்கிறது என்பதை சில நேங்களில் உணர்ந்திருப்போம். நல்லதை பேசினால் நல்லதும், கெட்டது பேசினால் கெட்டதும் நடக்கும் என்பது நுாற்றுக்கு, நுாறு உண்மை.
நம்முடைய நல்லெண்ணங்களும், வார்த்தைகளும், நம்மிலும், நம்மை சுற்றியுள்ளவர்களிடமும், ஏன் இந்த வையகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையுள்ளது
மனதின் அதிர்வலைகள் நாம் பேசும் வார்த்தைகளுக்கு மிகவும் வலிமையிருக்கிறது. நம் மன அதிர்வலைக்கு ஏற்ற ஒத்த அதிர்வலைகள் உள்ளவர்களிடம், நம்முடைய வார்த்தைகள் அதே போன்ற எண்ணங்களைத் துாண்டிவிடும் சக்தியுடையது.
நல்லதைப் பேசினால் நிச்சயம் நல்லது நடக்கும். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு
சொல் மந்திரம். எத்தனை முறை அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறோம்? சில வார்த்தைகள் ஆறுதலாக வந்துசேரும். சில வார்த்தைகள் நம்மைச் செதுக்கும். வேறு சில நம்மைப் புண்படுத்தவும் செய்கின்றன. சில வார்த்தைகள் வெல்லும். சில கொல்லும்.
உண்மையான அக்கறை உள்ளவர்களிடமிருந்து வரும் வார்த்தைகள் கேட்பதற்குக் கண்டிப்பாக இருந்தாலும் என்றைக்காவது ஒரு நாள் நம்மை நன்றி சொல்லவைக்கும். நம் அறியாமையைத் தெளியவைக்கும். அவை புத்தி புகட்டி ஞானத்தின் அடுத்த கட்டத்திற்கு நம்மைக் கொண்டுசெல்லும்
வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவங்கள் பெரும்பாலும் வார்த்தை எனும் அடிதளத்தின் மீதே அமைகின்றன. உறவின் அன்பு, ஆசிரியரின் அறிவு, கல்வி, கண்டிப்பு மற்றும் நட்பு, ஆறுதல், வாழ்த்து போன்ற அனுபவங்கள் ஒவ்வொன்றும் வார்த்தைகளின் கோர்வையாகத்தான் நிகழ்கின்றன. சிலவார்த்தைகள் குணத்தைக் காட்டும், சில வார்த்தைகள் பண்பை பறைசாற்றும். சில வார்த்தைகள் சாட்சி சொல்லும், சில வார்த்தைகள் ஆட்சி செய்யும். எனவே சொல்லும் சொல்லின் பொருளறிந்து பேசுவது அறிவுடைமையாகும்.
வார்த்தைகள் கடவுளையும் கண்முன்னே காட்டக்கூடிய வல்லமைப் பெற்றவை. இவ்வளவு சக்தி வாய்ந்த வார்த்தைகள், அருகே இருக்கும் மனிதர்களை நெருக்கத்தில் கொண்டுவருவதும், அல்லது நெருக்கடியில் தள்ளுவதும் அதை பயன்படுத்துவோரின் வாய்மொழிப் பலனே ஆகும்.
வார்த்தை என்பது பல்வேறு உணர்வுகளை உள்ளடக்கிய விதைப் போன்றது. அந்த விதையின் விளைச்சல், மணம் வீசும் மலர்களைப்போல சூழலை இனிமையாக்கலாம். சுவையான கனிகளைப்போல நிறைவான பயன்தரலாம். மூலிகைப்போல உயிர்காத்து மகத்துவம் ஆகலாம். நிழல் தரும் மரம் போல ஆறுதல் தரலாம். இத்தகைய ஆற்றல் கொண்ட வார்த்தை பிறந்த இடத்துக்கும் பெருமை சேர்த்து, சென்று சேரும் இடத்தையும் உயர்த்தும் தன்மை கொண்டது.
வார்த்தை, பேசுபவரின் தரத்தைக் காட்டும் கண்ணாடி. அறிவின் ஆழம் குறிக்கும் அளவுகோல். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையையும், நாகரிகத்தையும் இன்று நாம் அறிந்துகொள்ள பெரிதும் உதவுவது அவர்கள் விட்டுச்சென்ற ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் உள்ள வார்த்தைகளே. உலகம் போற்றும் காப்பியங்களும்,காவியங்களும் வார்த்தைகளின் வண்ணக் கோலங்கள்தான்.
இன்றைய வார்த்தைகள்தான், நாளைய வரலாறு படைக்கும் சக்தி வாய்ந்தவை. காலம் கடந்தும் ஞாலம் வெல்லும் ஆற்றல் பெற்றவை. இதை நன்கு உணர்ந்து எங்கும் எப்போதும் நல்ல உணர்வைத் தரக்கூடய ஆற்றல்மிக்க சொற்களையே பயன்படுத்திப் பலனளிப்போம், பயன்பெறுவோம்.
நீலமும்-புரட்சியும்
நீலம் இது ஒரு நிறம் மட்டும் அல்ல, இந்த சமுதாயத்தில் அது ஆற்றிய தொண்டுகள் பல.ஆம், நீலம் என்றாலே நினைவிற்கு வருவது நம் நாட்டின் புரட்சியாளர். கற்பி, ஓன்று சேர், புரட்சி செய் என்று கூறிய மாமேதை.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்றுறைத்த சீர்திருத்தவாதி. நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்ட மேதை , இதற்கெல்லாம் மேலாக ஜெய் பீம் என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர், அவர் தான் பாபா சாகேப் ( பொருள் : தந்தை) என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ( இயர் பெயர் என்ன:பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர்).
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்,உயர் கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்,பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர், பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர், இப்படி இவரை பற்றி சொல்ல இன்னும் எத்தனையோ உள்ளது.
சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் தீவிரமாக எதிர்த்தார். அதற்காக சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் கைகளில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார்.
அவருடைய சிந்தாத்தங்களை பின்பற்றி தொடங்கப்பட்ட, கட்சிகளும் அமைப்புகளும் நீல நிறத்தை தங்களது கொடிகளில் பரவவிட்டிருக்கும். ஏனெனில்அம்பேத்கருக்கு நீல நிறம் பிடித்தமான நிறம். பிடித்தமானது என்பதையும் தாண்டி, ஒரு காரணம் உள்ளது.
பரந்து விரிந்த வானம் போன்று நமது சிந்தனைகள் இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தவர். வானம் நீல நிறம்தானே, அதனால், நீலம் அவருக்கு இன்னமும் பிடித்தமானதாக ஆனது.
இன்று, மக்களால் அமைக்கப்படுகின்ற அம்பேத்கர் சிலைகளில் நீல நிற கோட் அணிந்து அவர் ஒரு கையில் அரசியல் சாசனத்துடனும், மறு கையை முன்னே நீட்டியவாறு முன்னோக்கி செல்லுங்கள் என அனைவருக்குமான வழியை காட்டுகிறார். அவர் காட்டும் வழி சமத்துவமானது, சனாதனத்திற்கு எதிரானது,ஜனநாயகத்திற்கு ஆதரவானது. அவருக்கு பிடித்தமான நிறத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவருக்கு எதற்க்காக அந்த நிறம் பிடித்தது என்பதன் அடிப்படையையும் கருத்தில் கொண்டு அவர் வழி நடப்போம்.
நீலம் இது வெறும் நிறமல்ல சனாதனத்திற்கு எதிராக எழுதப்பட்ட வரலாறு.

"வீழ்க சனாதனம், வாழ்க ஜனநாயகம்"
ஹைதராபாத்தில் நேற்றைக்கு முன் தினம் கொடூரமான முறையில் கற்பழித்து கொல்லப் பட்ட கால் நடை மருத்துவர் பிரியங்கா செட்டி பற்றிய செய்தி தாள முடியாத கோபத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாவது சகிக்க முடியவில்லை.
அரசு இக்கொடுஞ்செயலை தடுக்க உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.
இல்லையேல் மக்களின் தீராத கோபம் வெடித்துக் கிளம்பும்
பிரிவு
பிரிவு இயற்கையின் சாரல்
பிரிவு எல்லா பயணத்திலும் உடன் வருவது பிரிவின் சுகம் அறியாதவர்கள் வாழ்வின் இன்பம் அறிவதில்லை
பிரிவின் வலி என்பது சுகமான துன்பம் அதை ஏற்று கொள் பிரிவின் நீண்டதோர் பயணம் வாழ்வின் நிரந்தர இன்பம்
"வின்னில் இருந்து மழைதுளி பிரிவதாழ் இயற்கை அழகாகிரது"
பிரிவு நிரந்தரம் அல்ல நினைக்கும் வரை பிரிவு நம் வாழ்வில் நம்மோடு தொடரும் நண்பன்
"பள்ளி செல்லும் வயதில் தாயிடம் இருந்து பிரிவு
மனைவி வந்த பின்னே உறைவிடம் பிரிவு"
பிரிவை ஏற்று கொள் பிரிவின் சுகம் உனரும் வரை
நீண்டதோர் பயணத்தில் உடன் பயணிப்பவரை விட்டு பிரிவது போல் உடலை விட்டு உயிர் பிரியும் போதும் ஏற்று கொள்வதை போல் பிரிவை ஏற்று கொள் பிரிவின் சுகம் உணர்வாய்
பிரிந்த பின்னே சிறிது தூரம்
சென்று திரும்பி பார் பயணத்தில் நீ தொலைத்த அனைத்தையும்
உன்னை நீ உணர்வாய் உன் வலிமை உனக்கு புரியும்

ஆதவனின் கதிர்கள் அகன்று அந்தி சாயும் வேளையில், அருவி நீருடனான என் காதல் கலவரமின்றித் தொடர்கிறது. காதல் மோகத்தில் இலயித்திருந்த உடலும், மனமும் பயமென்ற போர்வையைக் கலைத்து மெல்லத் தவழ்கிறது.
மனம் உள்ளூர இன்பம் கொண்டிருந்த வேளையில், அதோ அப்பாறையின் பிளவிலிருக்கும் இரு கண்கள் இப்பூவுடலை சல்லடையாய்த் துளைக்கிறது. அந்த முயலின் கூர்மையான பார்வை, பருவக் களிப்பை எதிர்நோக்கி திணவுடன் நிற்கும் ஆடவனின் பார்வையாக உள்ளது. அடிப்பெண்ணே, இதென்ன பொய் வெட்கம், தொடரட்டும் நீருடனான உன் ஆலிங்கனம் !
