எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உதிரம்... தியாகமானது - வீரர்கள் மாண்டபொழுது... உயிரூட்டும் தாய்...




உதிரம்...


தியாகமானது - வீரர்கள் மாண்டபொழுது...

உயிரூட்டும் தாய் பாலானது - தாயின்  தேகத்தில் இருந்த பொழுது...

வலியானது - சதைகள் பிழந்து காயமான பொழுது...

காதலானது - கடிதத்தின் வார்த்தைகளான பொழுது...

உழைப்பானது - அப்பாவின் வியர்வை வழிந்த பொழுது...

உன்னதமானது - உதிரத்துடன் உயிர் பிறக்கும் பொழுது...

ஆனால்...

உதிரமும் கருமமானது - மாதவிடாய்ச் சுழற்சியின் பொழுது...

அவ்வுதிரமின்றி.. நீயுமில்லை.. நானுமில்லை.. மானுடமுமில்லை.. மனிதன் ஆளும் இவ்வுலகமும் இல்லை என்பதை மறவாதே.. மானுடா...

- செல்வ கிருஷ்ண மானிஷா

பதிவு : NskManisha
நாள் : 2-Mar-20, 7:55 am

மேலே