எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாக்., தாக்குதலுக்கு மோடி காரணமாம்; ஹபீஸ் சையீதுவின் அண்டப்புளுகு...

பாக்., தாக்குதலுக்கு மோடி காரணமாம்; ஹபீஸ் சையீதுவின் அண்டப்புளுகு !

கராச்சி: பாகிஸ்தான் கராச்சி விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்புலத்தில் இந்திய பிரதமர் மோடியின் டீம் தான் செயல்பட்டிருக்கிறது என யாரும் நம்ப முடியாத, அப்பட்டமான பொய்யை தனது டுவீட்டரில், பயங்கரவாதி ஹபீஸ் சையீது கூறியிருக்கிறார். பாகிஸ்தான் கராச்சி பழைய விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு புகுந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பாக்., படையினர் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு 10 பேரை சுட்டு கொன்றனர். பொதுமக்கள் உள்பட 23 பேர் பலியாயினர். அதிகாலையில்தான் நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்நிலையில் காலை 11 மணியளவில் மேலும் ஒரு தாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள இ தெக்ரிக் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது.


ஹபீசின் அண்டப்புளுகு ! இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது (மும்பை குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர்) தனது டுவீட்டரில், " பாகிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு மோடியின் புதிய பாதுகாப்பு டீம் பின்புறமாக இருந்து செயல்பட்டுள்ளது. இந்த அணியினர் பாகிஸ்தான் மீது மறைமுக போரை நடத்தியுள்ளனர். எங்கள் தேசத்திற்கு தெரியும் யார் உண்மையான எதிரி என்று.,” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


ஜமாஉத்வா அதிகாரப்பூர்வ டுவீட்டரில், இந்த கொடூரமான தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிரான மோடியின் திட்டமே ! புதிய இந்துத்துவா அரசின் இந்த செயல்பாட்டிற்கு நேரடியான ஆதாரம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாள் : 9-Jun-14, 7:40 pm

மேலே