தமிழியக்கம் - ஏடெழுதுவார்!

பார்ப்பனர்கள் ஏடெழுதும்
பாழ்நிலைமை போகுமட்டும்
பைந்த மிழ்க்கோ

சிர்ப் பெரிய நாட்டினுக்கோ
சிறிதேனும் நன்மையில்லை
திருட ரின்பால்

ஊர்ப்பணத்தை ஒப்படைத்தல்
சரியாமோ செய்தித்தாள்
உடையா ரன்றோ

ஊர்ப்பெருமை காப்பவர்கள்
அஃதில்லார் ஏதிருந்தும்
ஒன்று மில்லார்!

ஆங்கிலத்தில் புலவரெனில்
அரசினரின் அலுவலிலே
அமர்ந் திருப்பார்!

பாங்குறு செந் தமிழ்ப்புலமை
படைத்தாரேல் பள்ளியிலே
அமர்ந்திருப்பார்!

தீங்குற்ற இசைப்புலமை
சிறிதிருந்தால் படத்தொழிலில்
சேர்ந்தி ருப்பார்!

ஈங்கிவற்றில் ஏதுமிலார்
தமிழினிலே ஏடெழுதிப்
பிழைக்க வந்தார்

ஓவியத்தின் மதிப்புரையும்
உயர்கவியின் மதிப்புரையும்
இசையின் வல்லார்

நாவிலுறு பாடல்களின்
நயம்பற்றி மதிப்புரையும்
உரைந டைக்கு

மேவுகின்ற மதிப்புரையும்
கூத்தர்களின் மதிப்புரையும்
விள்வார் நாங்கள்

யாவும் அறிந்தோம் என்பார்
பெரும்பாலோர் பிழையின்றி
எழுதல் இல்லார்.

ஊர்திருடும் பார்ப்பானும்
உயர்வுடையான் எனக் குறிப்பார்
திரவிடர் கொள்

சிர்குறித்துச் சிறிடுவார்
சிறுமையுற வரைந்திடுவார்
செய்யுந் தொண்டு

பார்திருத்த என் றிடுவார்
பழமைக்கு மெருகிடுவார்
நாட்டுக் கான

சிர்திருத்தம் என்றாலோ
சிறுநரிபோல் சூழ்ச்சியினைச்
செய்வார் நாளும்!

நடுநிலைமை இருப்பதில்லை
நல்லொழுக்கம் சிறிதுமிலை
தமிழை மாய்க்கும்

கெடு நினைப்பே மிகவுடையார்
கீழ்மையிலே உடல்வளர்ப்பார்
பொருள் படைத்தோன்

அடிநத்த நாணுகிலார்
அறமொன்றும் கூறுகிலார்
ஏழை யோரின்

மடிபறிக்கும் திறமுடையார்
மறந்தேனும் திரவிடரை
மதித்தல் இல்லார்!


கவிஞர் : பாரதிதாசன்(19-Mar-11, 6:50 pm)
பார்வை : 83


பிரபல கவிஞர்கள்

மேலே