காதல் சொல்ல வந்தாள் என்னிடத்திலே...!!!

இன்று எப்படியாவது
தன் காதலை சொல்ல வேண்டும்
என அவனை வர சொல்லிவிட்டு
அவள் காத்து கொண்டிருந்தாள்...!!

ஏதோ அவசரம் என
அவனும் உயிர் தொலைத்து
ஓடி வந்து அவளிடம்
என்னவென கேட்டான்...!!

இவளுக்கோ பயம்..!!
நம் காதலை அவன் மறுத்து விட்டால்
எப்படி சொல்லி சமாளிப்பது..!!
தயக்கத்தில் தலை குனிந்து
யோசனையில் அவள் நின்றாள்..!!

இவனுக்கோ அவள் அமைதியின்
உண்மை முகம் தெரிந்தும்
தெரியாதது போல் காட்டி கொண்டு
சோகத்திலே நின்று விட்டான்..!!

இப்போதெல்லாம் நான் நானாக இல்லை,
உனக்கு பிடித்த எல்லாம்
எனக்கும் பிடிக்கிறது,
உன் பெயர் சொன்னால் வெக்கம் வருகிறது,
இது ஏன் என்று தெரியவில்லை
என அவள் வேகமாய் சொல்லி முடித்தாள்..!!

உண்மையாக தான் சொல்கிறாயா..??
நீ சொல்வதை பார்க்கும் போது
என்னை காதலிக்கிறாய் என நினைக்கிறேன்
என அழகாக இவன் கேட்டான்..!!

அவன் தன்னை புரிந்து கொண்டதில்
இவளும் மகிழ்ச்சியுடன் ஆம் என்றாள்..!!

நீ தாமதமாக என்னிடம் சொல்கிறாய்,
நானும் ஏற்கனவே ஒருத்தியை காதலிக்கிறேன்
இப்போது என்ன செய்வது என இவன் கேட்டான்,,!!

அழுகையையும்,ஏமாற்றத்தையும்
மறைத்து கொண்டு
என்னை மன்னித்து விடு,
நான் செல்கிறேன் என அவள் போகும் முன்
இவன் அவளின் கை பிடித்து இழுத்து
என்னை விட்டு எங்கே போகிறாய்
நான் காதலிப்பவள் நீ தான்..!!

உன்னை நேரில் பார்க்கும் முன்பே
கனவில் காதலிக்க தொடங்கிவிட்டேன்..!!
என இவன் சொல்லி முடிக்கும் போது
காதல் கை தட்டியது...!!

எழுதியவர் : மனோ ரெட் (12-Jun-13, 1:09 pm)
பார்வை : 140

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே