வேறு நிலாக்கள் 15 - குமரேசன் கிருஷ்ணன்

ஆவாரங்காடு
--------------------------
அதுவொரு ஆவாரங்காடு
அம்மன் போட்டவர்களுக்கு
ஆவாரம் பூ கொய்ய...
அவளோடு சிலபொழுது
சென்றதாய் ஞாபகம் ?

அவளொரு சலவைக்காரி
அதரச் சிரிப்பொலியில்
அடித்து துவைத்தெனைக்
அவ்வப்போது காயவைத்து
அக அழுக்குகளை
அகற்றிவிடுவாள் ...

அந்த ஆவாரங்காட்டில்
உதிர்ந்த இலந்தை பழங்களை
அவள் பொறுக்க...
உதப்பழங்களை பறித்து
என் வீரத்தை முழுவதும்
பறைசாற்றியிருப்பேன் ..நான் !

இலந்தைமுள் கிழித்து
இரத்தம் சொட்டுகையில்
அவளின் விழியோர நீர்
பல விந்தைகளை
என்னுள் மீட்டும் ?

அவள் அதிகம் பேசுவாள்
அவளோடு நானிருக்கையில்
மௌனத்தில் புதைந்திருப்பேன் ...

ஆனாலும் ...வழக்கம்போல்
அடுத்த அம்மன் வரவினை
எதிர்நோக்கியிருக்கும்
என் உள்மனம் ?
----------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (6-Feb-16, 12:22 am)
பார்வை : 220

மேலே