SariThaN SEDJS - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SariThaN SEDJS |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Apr-2017 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 1 |
குருதியில் தோய்த்த பள்ளியாடை
எம்தேசமதில்
குண்டு மழைக்காலம்
பயணமானாள் போலும் பள்ளிக்கு
வீட்டுச் சிறை உடைத்து
புன்னகைத்துப் போகக் கண்டு
மெல்லத் தொடர்கின்றேன்
ஆகாய இரும்பு கழுகு
பேரிரச்சலோடு உலோகக் குண்டை
அனல்மழையென கக்குகிறது
நிற்போர் நடப்போர்
சக்கரங்களில் போவோர்
விழுந்து படுக்க
விரைகின்றேன் சென்றவளிடம்
ஆகாய இரும்பு கழுகு
அள்ளிவந்த அடைமழையில்
சிலபெரும் துளிகள்
வீழ்ந்திட்டதோ! ஐயோ
வீழ்ந்து கிடக்கின்றாள்
துளிர்த்தகொடி
வெண்நிறப் பள்ளியாடை
குருதியால் தோய்த்ததுபோல்
சற்றுமுன் கண்டேனே
கண்களால் உணவூட்டிப் போக
ஆவிதுடிக்க தளிர்மேனி
தாவி அணைத்து
செய்
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ