எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம், உங்களைத்தான்... *சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். இரவு பயணம்...

வணக்கம், உங்களைத்தான்...
*சொந்த ஊருக்கு சென்றிருந்தேன். இரவு பயணம் எவ்வளவு இனிமையானது, அதுவும் இளையராஜாவும், SPB-யும் உடன் வரும்போது. மகிழுந்து முன்நோக்கி பயணம் செய்தாலும், என் எண்ணங்கள் பின்னோக்கி. பழைய நினைவுகள் மகிழ்ச்சியால் மனம் நிரப்பி வழிந்தோடியது, என் வாய்வழி பாடலாய்...

*குலதெய்வம் என்று ஒன்றை குறிப்பிட்டு, அதை வழி வழியாக கும்பிட்டு வருகிறோம். என் குல தெய்வம்(சொக்கநாதர்) கும்பிட தொடங்கிய முதல் ஆள் (என் சொந்தத்தில்) யாராக இருக்கும்...

*வானவில் நான் சிறு வயதில் பார்த்து ரசித்திருப்போம். கடைசியாக பார்த்தது நினைவில் இல்லை. சென்னையில் பார்க்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். முதன் முதலில் வானவில் பார்த்த மனிதன் என்ன நினைத்திருப்பான்...

*ஊருக்கு சென்று வந்தால் நண்பர்களுக்கு எதாவது கொண்டுவர வேண்டுமே. உங்களுக்காக சில புகைப்படங்களும்(மேலே உள்ளது, 1.குலதெய்வம் கோவில் அருகே பிடித்தது 2. நேற்று சென்னை வரும் வழியில் பிடித்தது), கொஞ்சம் கவிதையும்(பிறகு பதிவிடுகிறேன்) எடுத்து வந்தேன் உங்களுக்காக... நன்றி.

பதிவு : ப்ரியன்
நாள் : 15-Sep-14, 11:20 pm

மேலே