உனக்கான கவிதைகள் எல்லாம் நீ விட்டுப்போன பிறகு மொத்தமாய்...
உனக்கான கவிதைகள் எல்லாம்
நீ விட்டுப்போன பிறகு
மொத்தமாய் கட்டி
கடற்கரையில்
சுண்டல் விற்கும் சிறுவனிடம்
கொடுத்தபோது
"தொழில் தர்மப் படி
தோத்த காதல் கவிதைல
சுண்டல் கட்ட கூடாது சார் "
என்று சொன்னவன் ...
" அந்த அக்காவுக்கு
கவிதைன்னா இஷ்டமா "
என கேட்டபோதுதான்
என் மாபெரும் தவறு
எனக்கு புரிந்தது .