எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம். நம் தளத்தில் சென்ற...

தமிழ் கூறும்  நல்லுலகிற்கு  வணக்கம். நம் தளத்தில் சென்ற வாரம் முதல் நண்பர் ஜின்னா அவர்களால் துவங்கப்பட்டு  நண்பர்கள் பலரின் பங்களிப்பில் வெற்றிகரமாக உலா வந்து கொண்டிருக்கும் கஜல் கவிதைத் தொடரான காட்சிப் பிழைகளை நாம் அனைவரும் வாசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தத் தொடரின் ஆளுமை, வீச்சு, படைப்பாளிகளின் ஆக்கப் பூர்வமான பங்களிப்பு, அழகியல் இன்னபிற விடயங்களையும் கடந்து வாசிப்புப் பழக்கம் குறைந்து போயிருந்ததைப் போல ஒரு தோற்றப்பிழையோடு  இருந்த இத்தளத்தில் மீண்டும் புது ரத்தம் பாய்ச்சியதைப் போல காட்சிப்பிழையில் பதியப்படும் ஒவ்வொரு கவிதைகளும் சராசரியாக 200 பார்வைகளுக்கு மேல் கடந்து உலாவந்து கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் வெற்றி நண்பர்களின் பங்களிப்பாலும் வாசிப்பினாலும் மட்டுமே சாத்தியப்பட்டது. அனைவருக்கும் நன்றி. 
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தளத்தில் பதியப்படும் காட்சிப் பிழைகள் நம் தமிழ் கூறும் நல்லுலகின் பெருமகனார்  மகாகவி திரு. ஈரோடு. தமிழன்பன் அவர்களாலும் வாசிக்கப் பெற்று அவர்கள் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. கஜல் கவிதைகளின் ஒவ்வொரு மூலக்கூறுகளையும் விளக்கி நம் படைப்பாளி நண்பர்களையும் வாழ்த்தியனுப்பிய வாழ்த்துச் செய்தி... இதோ.. அனைவரின் பார்வைக்காக..... 


https://www.youtube.com/watch?v=1SDtsl-Zg2w&feature=youtu.be

பதிவு : கட்டாரி
நாள் : 20-Dec-15, 2:38 pm

மேலே