எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆரியத்தை உயர்த்துவதும் தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது +++ ஆரியர்...

  ஆரியத்தை உயர்த்துவதும் தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது +++ ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் ++++

அகரமுதல 124, மாசி 30, 2047 / மார்ச்சு 13, 2016

இலக்குவனார் திருவள்ளுவன்      13 மார்ச்சு 2016      கருத்திற்காக..தலைப்பு-ஆரியர் வருகை்கு முன்னர் - இலக்குவனார் - thalaippu_bharathakandathil thamizhargal_S.Ilakkuvanar
ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்  தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும்பற்றித் தமிழர்களே கற்றவர் என உலகோரால் போற்றப்படும் தமிழரே நன்கு அறியாதவராய் உள்ளனர். ஆரியர் வருகைக்கு முன்னர் பரத கண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இமயம் முதல் குமரி வரை இனிதே வாழ்ந்த தமிழர்கள் ஆரியர்களிடமிருந்தே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றனர் என்று கூறுவது உண்மை நிலையறியாத வரலாற்று ஆசிரியர்க்கு ஒரு மரபாகிவிட்டது. மேனாட்டு வரலாற்று ஆசிரியர்களில் சிலர் நடுநிலை நின்று ஆராய்ந்து ஆரியர்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்னரே தமிழர்கள் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கினர் என்று கூறியுள்ளமை நன்கு விளம்பரம் பெற்றிலது.– பேராசிரியர் சி.இலக்குவனார்குறள்நெறி (மலர்1 இதழ்18): ஆவணி 17,1995: 1.9.64

ஆரியத்தை உயர்த்துவதும் தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது



அகரமுதல 124, மாசி 30, 2047 / மார்ச்சு 13, 2016

இலக்குவனார் திருவள்ளுவன்      13 மார்ச்சு 2016      கருத்திற்காக..தலைப்பு-ஆரியத்தை உயர்த்துவதும்தமிழைத்தாழ்த்துவதும்வழக்கம்-சி.இலக்குவனார் : thalaippu_aariyathaiuyarthuvadhuvazhakkam_S.Ilakkuvanar
ஆரியத்தை உயர்த்துவதும் உண்மையான உயர்வுடைய தமிழைத் தாழ்த்துவதும் வழக்கமாகிவிட்டது  தூயதமிழ்ச் சொற்களை ஆரிய மொழிச் சொற்கள் எனத் திரித்துக் கூறுவதும், தமிழர்க்கே உரிய நாகரிகத்தையும் பண்பாட்டையும் ஆரியர்க்குரியன என அறங்கோடி அறைவதும் இன்னும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றமை மிக மிக வருந்துவதற்குரியது. உண்மைக்குப் புறம்பான புனைந்துரை எழுதி ஆரியரே மேலோராய்த் தமிழர்க்கு நாகரிகம் கற்பித்தனர் எனக் கூறுவோரை உயர்ந்த வரலாற்று ஆசிரியர் என்பதும் காய்தல் உவத்தல் இன்றிஆராய்நது தமிழர் நாகரிகச் சிறப்பை உரைப்போரைக் குறுகிய நோக்கமுடைய குறுமதியாளர் எனக் குற்றம் கூறி இகழ்வதும் இத் தமிழ் நாட்டில் பெரு வழக்காய் விட்டது.பேராசிரியர் சி.இலக்குவனார்குறள்நெறி (மலர்1 இதழ்18): ஆவணி 17,1995: 1.9.64

நாள் : 19-Mar-16, 2:33 am

மேலே