எண்ணம்
(Eluthu Ennam)
நீங்கள் உருவாக்கிய மனுஷி..!தண்டவாளத்தின் கிராசிங்கில்இதோ நீங்கள் உருவாக்கிய மனுஷிஉங்களுக்காக... (kuyilibanu)
17-Nov-2017 11:18 am
நீங்கள் உருவாக்கிய மனுஷி..!
தண்டவாளத்தின் கிராசிங்கில்
இதோ நீங்கள் உருவாக்கிய மனுஷி
உங்களுக்காக காத்துக் கிடக்கிறாள்...!
குடும்பத்திலிருந்து உங்களால்
விரட்டப்பட்டவள்...!

நீங்கள் பயணிக்கும் தொடரியில்
உங்களிடம் பிச்சைக் கேட்க
உங்களுக்காக காத்துக் கிடக்கிறாள்...!
நீங்கள் அவளைப் பார்த்து கண்டிப்பாக
முகம் சுளிப்பீர்களென அறிந்தும்
அந்த இரும்பு தண்டவாளத்தை
கடப்பது போல
உங்கள் முக சுளிப்புகளை கடந்து
உங்களிடம் பிச்சையீட்ட
அவள் உங்களுக்காக காத்துக்
கிடக்கிறாள்...!
அவள் எப்போது வேண்டுமானாலும்
எதிர்வரும் தொடரி மோதி சாகலாம்...!
அது ஒரு தற்செயல் ..!
ஆனால் நீங்களிடும் பிச்சையீட்டி
வாழ்வது தான் அவள் விதியாயிற்றே..!
அவ்விதி வழியே...
அவள் அங்கு காத்துக் கிடக்கிறாள்...!
அவளை கூர்ந்து நோக்குங்கள்..!
அவள் உங்களுடைய சகோதரியாக
இருக்கக்கூடும்...!
அவளை கூர்ந்து நோக்குங்கள்...!
அவள் நீங்கள் ஈன்றெடுத்த
உங்களின் பிள்ளையாக இருக்கக்கூடும்...!
துண்டு சதை
பிணமாய் கிடந்த ஆணுறுப்பை வெறுத்தறுத்து புது பாலினமானேன்.!
அத்துண்டுச் சதையை
குருதியோடு புதைத்த போதுதான்
புரிந்தது அதன் அதிகாரப் பரப்பு.!அப்போது எனக்கு உறவுகள் இருந்தன
வீடிருந்தது
மதிப்பிருந்தது
நான் மாணுடாமாகவும் இருந்தேன்
ஆனால் என் பாலினம் மட்டும் என்னிடம் இல்லை!
இத்துண்டுப் பிணத்தை புதைத்த பின்
என் பாலினம் என்னிடம் இருக்கிறது
ஆனால் என் உறவுகளில்லை
எனக்கென்று வீடில்லை
சமூக மதிப்பில்லை
நான் மாணுடமாகவே அங்கிகரிக்கப்படவுமில்லை.!
சுய பாலினத்தோடு
அங்கீகரிக்கப்படாத மாணுடமாய் வாழ்வதா...?
சுயத்தை மறுத்த
மாணுடப் பிணமாய் உழல்வதா...?
எனக்கேற்பட்ட அதே சிந்தனை வலியில்
ஆயிரமாயிரம் திருநர்கள்
அறுத்தெரிய வேண்டிய
அத்துண்டுச் சதையை
சுமந்து திரிகிறார்கள்
குடும்பக் குமிழில்
மாணுடப் பிணங்களாய்...!
நண்பர்களே...
அவர்கள் உங்கள் பிள்ளைகளாக இருக்கலாயின்
உங்கள் வீட்டை அவர்களுக்கான
கல்லறைகளாக்காதீர்கள்..!அவர்களின் அழகான
ரத்த உறவுகளான நீங்கள்
அவர்கள் வெறுத்தொதுக்கும்
எதிரிகளாய் உதிர்ந்து விடாதீர்கள்..!அவர்கள் தெரிவு செய்த
பாலினத்தை அங்கீகரியுங்கள்..!
அது தன் சிறகை விரிக்க
உதவி புரியுங்கள்.!
ஏனெனில் அவர்கள் உங்கள் பிள்ளைகள்..!
அதைவிட அவர்கள் மாணுடர்கள்..!
துண்டுச் சதையல்ல
உங்கள் அன்பே மாணுடத்தை
தீர்மானிக்கிறது..!
நல்ல கருத்து; உணர்வு பூர்வமான கவிதை; உங்கள் படைப்பிற்கு என் வாழ்த்துக்கள்.தொடருங்கள் 27-Nov-2017 6:00 pm