எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாசகசாலை இலக்கிய சந்திப்பு - திருப்பூர் மாநகரில்- 


  எப்போதும் ஒரு விதமான எச்சரிக்கை உணர்வுடன் இருக்க நிர்பந்திக்கப்படுவது என்பது தாங்க முடியாத சுமை !. அப்படிப்பட்ட மக்கள் இவரின் கதை முழுக்க விரவிக் கிடக்கிறார்கள். அதிலும் கூட, ஆண்களுக்கு தங்களை நிரூபித்துக் கொள்வது மட்டுமே சோதனை. ஆனால், பெண்களுக்கோ தங்களை தற்காத்துக் கொள்ளவே பெரும் பாடு என்பதையும் விட்டு வைக்கவில்லை இவர்.இந்த மக்களை அடிமையாக்கிய புராணங்களை நம்பிக்கொண்டு வசதியாக நீங்கள் உட்கார விரும்புவீர்களானால் ...உட்காரும் இடத்தில் ஊசி வைக்கும் இவரிடம் உங்கள் மனசாட்சி தப்பவே முடியாது .
எளிமையான, ஆனால் ஆழமான எழுத்துக்கள் கொண்டு தன் அரசியலைப் பேசும் கலைஞர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. 
இவ்வாறான வீரியமிக்க இலக்கிய உலகில் மிக முக்கிய எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பை குறித்து கலந்துரையாடல் நிகழ்வாக திருப்பூரில் முன்னெடுக்கிறது வாசகசாலை.
வரும் ஞாயிறு மாலை 5:30 மணிக்கு swaad Restaraunt ல் வாசகசாலை “ இலக்கிய சந்திப்பு “ கலந்துரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் சிறுகதைத் தொகுப்பு குறித்த கலந்துரையாடல். அனைவரும் வருக..!  

மேலும்


மேலே