எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கஜா-பொங்கல் 

கறவை மாடு ,கன்றுக்குட்டி 
காலை சுற்றிய பூனைக்குட்டி ,
காணாமல் போயிற்றே கண்ணிமைக்கும் 
நேரத்தே !
வீட்டு கூரையிலே
வீற்றிருந்த காகமெல்லாம் 
காட்டுக்கு சென்றனவே 
கூரையை காணாமல்.
தென்னை மரங்களில் 
தென்மான்கு பாடியவை .
புன்னை மரக்கிளையில் 
புதைந்து கிடக்கின்றன .
காத்திருந்தேன் நெல் 
கதிராய் வருமென ,
காலம் செய்தது 
மண்ணாய் போவென.
கால்கடுக்க உழைத்தேன் என் 
கண்ணகியின் கால்சிலப்புக்கு ,
கடனுக்காக சென்றது என் 
கைவண்டி வங்கிக்கு .
காலத்தின் கோலமதை 
கட்டாயம் ஏற்க வேண்டும் .
காணாமல் போன வாழ்வை 
காண்பது நான் எந்நாளோ ?
இதனை கவலையில் 
இருந்தாலும் வாழ்த்துகிறேன் ,
எம்மக்கள் பொங்கலை .
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல். 

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே