தமிழ் கவிஞர்கள்
>>
கவிக்கோ அப்துல் ரகுமான்
>>
ஆன்மாவின் விபச்சாரம்
ஆன்மாவின் விபச்சாரம்
உலகுக் கெல்லாம்
ஒருவனே தலைவன்
தலைவணக் கம்அந்தத்
தலைவனுக் கேயென
அறவுரை கூறிய
ஆன்றோர் களையே
அவதாரம் என்பதும்
அவரடி வீழ்வதும்
தலைவனை ஆகழும்
தற்குறித் தனமே
அரும்பிய துருவமீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும் ?
தலைவன் ஒருவனைத்
தலையால் வணங்குவதே
தலைகற் பாகும்
தலைவனை அன்றி
மற்ற வற்றை
மகேசன் என்றே
தொழுவது கொடிய
தொழுநோய் ஆகும்
மேலும் அது
ஆன்மா செய்யும்
விபச்சாரம் ஆகும்
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
