கவிதை மழையின் புதிய முகவரி

கற்பனைகளின்
அந்தப் புரங்கள் வெந்து
கதகதக்க
வாழவின் எதார்த்தங்கள்
வார்த்தைத் தாழ்வாரங்களில்

வேய்ங்குழலாய் யுகத்தை
உருக்குமணி இசைக்கிறார்
வேர்களைப் பிடித்து
உறக்கத்தை அசைக்கிறார்

மூச்சில்
முள் தைக்காத
கவிதைகளின்
வீச்சில்
மலரட்டும்
உருக்குமணியின்
புதிய முகவரி ............


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(21-Apr-12, 5:08 pm)
பார்வை : 22


பிரபல கவிஞர்கள்

மேலே