வெண்ணிலா வெண்ணிலா

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்

கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்

தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்

(வெண்ணிலா)

என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்

எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்

நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்

ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்

(வெண்ணிலா)

கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்

கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்

வேரோடு துடிக்க யாரோடு உரைக்க

கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

(வெண்ணிலா)


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 12:34 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே