ஏதேதோ எண்ணம்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

உன் கையில் என்னை கொடுத்தேன்

நீ தானே புன்னகை மன்னன்

உன் ராணி நானே

பண் பாடும் பாடகன் நீயே

உன் ராகம் நானே

(ஏதேதோ..)



சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்

உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்

தூக்கம் விழிக்கிறேன்

பூக்கள் வளர்க்கிறேன்

சில பூக்கள் தானே மலர்கின்றது

பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது

பதில் என்ன கூறு

பூவும் நானும் வேறு

(ஏதேதோ..)



குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா

கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா

நீயே அணைக்கவா

தீயை அணைக்கவா

நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்

உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்

எது வந்த போதும்

இந்த அன்பு போது

(ஏதேதோ..)


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:49 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே