பார்வதி பார்வதி காதலில் சொதப்புவது எப்படி

கல்லு மண்ணு காணும் முன்ன
காதல் ஒண்ணு உண்டாச்சு
ஆணும் பொண்ணும் காதலிக்க
பூமி இங்கு ரெண்டாச்சு
பட்டு பட்டுக் கெட்டாலும்
கிட்டத்தட்டச் செத்தாலும்
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்
காதலித்து சொதப்புவோம்!
காதலித்து சொதப்புவோம்!

டேய்.. விடுங்கடா…
classஉக்குப் போய்… படுங்கடா
என் கொடுமைய
பொலம்பத்தான் விடுங்கடா
போனதே போனதே ஆயிரங்-கால்
ஃபோனில் எந்தன் பேரைக் கூட தூக்கிவிட்டாள்
கோடி சாரி சொல்லி போட்ட எஸ்ஸெமெஸ்ஸை
குப்பை லாரி ஏத்தி விட்டாள்
it’s over... it’s over…
எல்லாமே is over...
status single மாற்றி விட்டாளே!

பார்வதி… பார்வதி…
பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே
பார்வதி… பார்வதி…
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே
பார்வதி… பார்வதி…
போதும் என்று சொல்லி விட்டாளே
பார்வதி… பார்வதி…
காதலுக்கு கொள்ளியிட்டாளே

டேய்.. கடவுளே…
உனக்கென்ன குற வெச்சேன்?
என் கதையில
tragedy ஏன் வர வெச்ச?
ஊரெலாம் சுத்திட யாரிருக்கா?
பைக்கில் என்னை கட்டிக்கொள்ள யாரிருக்கா?
மூவி போக மூடு மாத்த யாரிருக்கா?
மோட்டிவேஷன் யாரிருக்கா?
it’s over… it’s over
எல்லாமே is over
என்று சொல்லி ஓடி விட்டாளே

பார்வதி… பார்வதி...
கும்பலோடு சுத்த விட்டாளே
பார்வதி… பார்வதி…
முத்தவிட்டு கத்த விட்டாளே
பார்வதி… பார்வதி…
சங்கு ஊதி மூடி விட்டாளே
பார்வதி… பார்வதி…
சிங்கிள் சிங்கம் ஆக்கி விட்டாளே


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 1:03 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே