இதுதான் கவிதையா

கவிதை என்றால் என்னவென்று இத்தனை
நாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது.
சில வாரங்களாக ஆனந்த விகடனில் சுரதா
எழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால்
என்ன வென்று இப்போது புரிந்தது.

எழுதுவதை எழுதிவிடவேண்டும் - எதுகை மோனை
நடை தாளம் எல்லாம் மண்ணாங் கட்டி!
மறக்காமல் ஒன்றுமட்டும் செய்ய வேண்டும்
எழுதிய 'எஸ்ஸே'யின் வார்த்தைகளை உடைக்க வேண்டும்
வரி வரியாகப் பிரிக்க வேண்டும்! அச்சுக்கு
அனுப்ப வேண்டும், அதுதான் கவிதை.

வார்த்தைகளை உடைப்பதும் வரிவரியாகப் பிரிப்பதும்
கவிஞனும் செய்யலாம்! கம்பாஸிடரும் செய்யலாம்!
தற்காலக் கவிதைகளைத் தருபவர் கவிஞரல்ல கம்பாஸிடர்தான்
என்ற உண்மையை உடைத்துக்காட்டிய சுரதாவிற்கு நன்றி!
விகடனுக்கு நன்றி!

கவிதை என்றால் என்ன வென்றே தெரியாத எனக்கு
சுரதா சுலபமாக கவிதை யெழுத கற்றுத் தந்துவிட்டார்
இதுவே அவர் பாணியில் நான் எழுதிய கவிதை!
மற்றவற்றை கம்பாஸிடர் கவனிக்க வேண்டுகிறேன்!



கவிஞர் : சுரதா(6-Dec-12, 1:01 pm)
பார்வை : 0


மேலே