தமிழ் கவிஞர்கள்
>>
குட்டி ரேவதி
>>
அணிலாகி நின்ற மரம்
அணிலாகி நின்ற மரம்
அதிகாலை மரத்தில் தன் குரல் சப்தத்தை
கிளையெங்கும் பூத்துக்குலுங்கும் பூக்களாக்கிய
அணில் ஒரு மழையால் அடங்கியது
வானம் தன் இசையை ஒரு பெருமழையாக்க
பூக்களை உதிர்த்த கிளையிலும் இலையிலும்
வந்து தங்கியது நீரின் குரல்
அணிலாகி நின்ற மரத்தில்
எப்பொழுது பூக்கள் மீண்டும் குலுங்குமென
எல்லோரும் காத்திருக்க
சுள்ளென்று வெயில் வந்து மர உச்சியில் அமர,
காலம் ஒரு மரமாய் நின்றது
பூக்களற்ற மரம்
மதிய வேளையின் சாபம்.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
