சித்தர் - இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள்

நேர்மையான மனிதர்

கவர்ச்சியாகப் பேசுவதில்லை;

கவர்ச்சியான மேடைப்பேச்சு

நேர்மையானது இல்லை;

விவேகமான மனிதர் பண்பட்டவர் அல்லர்;

பண்பாடு விவேகம் ஆகாது.

நிறைவடைந்த மனிதர் செல்வந்தர் அல்லர்;

செல்வங்கள் நிறைவு ஆகாது;

எனவே, சித்தர்

தனக்கென எதுவும் செய்வதில்லை.

அவர் மற்றவர்களுக்கு

அதிகம் செய்ய செய்ய

அதிக திருப்தி அடைகின்றார்;

பிறர்க்கு அதிகம் கொடுக்க கொடுக்க

அவர் அதைவிட அதிகம் பெறுகின்றார்;

ஒருத்தரின் தயவிலும்

இயற்கை செழிப்பதில்லை.

எனவே, சித்தர் எல்லோருக்கும் பயன்படுகின்றார்;

யாருடனும் போட்டி போடுவதில்லை.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 7:16 pm)
பார்வை : 0


மேலே