தமிழ் கவிஞர்கள்
>>
குட்டி ரேவதி
>>
வழிக்கு வா - இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள்
வழிக்கு வா - இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள்
பெண்மையில் இருந்து கொண்டு
ஆண்மையைப் பயன்படுத்துங்கள்;
இதுவே, இவ்வுலகின் நுழைவாயிலாய் இருக்கின்றது.
நீங்கள் இசைவைத் தழுவி
பிறந்த குழந்தை போலாகிவிடுங்கள்;
பலமின்மையில் இருந்து கொண்டு
பலத்தைப் பயன்படுத்துங்கள்;
இதுவே, இவ்வுலகின் வேராய் இருக்கின்றது.
நீங்கள் இசைவுக்குள் மொத்தமாய் மூழ்கி
செதுக்காத மரத்துண்டு
போல் ஆகுங்கள்;
இருளாய் இருந்து கொண்டு
ஒளியைப் பயன்படுத்துங்கள்.
இதுவே, இவ்வுலகமாய் இருக்கின்றது.
நீங்கள் நேர்த்தியான இணக்கமாகி
வழிக்குத் திரும்புங்கள்.
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)