தமிழ் கவிஞர்கள்
>>
கலாப்ரியா
>>
வழிமயக்கம்
வழிமயக்கம்
பாதை நொடியின்
ஒவ்வொரு
குலுக்கலுக்கும்
நொதித்த திரவம்
பீப்பாயின்
பக்கவாட்டில் வழிந்து
பாளைச் சொட்டை
சுவைத்து
மயங்கியிருந்த வண்டுகளை
வெளித்தள்ளின.
கிறக்கம் நீங்க நீங்க
வண்டியின் வேகத்திற்கு
ஈடு கொடுத்து
அவை பறந்து
பறந்து விழுந்தன
நிழலில் நிறுத்தி
முற்றாய்ச் சுடாத
கலயத்தில் சாய்த்த
திருட்டுக்கள்ளை
மாந்தி மாடுகளுக்கும்
தந்தான்
இப்போது பாதையில்
நொடியே இல்லை
வண்டிக்கும் மாடுகளுக்கும்
வண்டியோட்டிக்கும்
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
