போராட்டம்

கைவசமிருந்த காதற்
கடிதங்கள் எரித்தேன் வாசல்க்
கதவுமுன் குவித்துப் போட்டு

காகிதம் எரிந்து கூந்தல்
சுருளெனக் காற்றில் ஏறி
அறைக்குள்ளே மீளப் பார்க்கக்
கதவினைத் தாழ்ப்பாளிட்டேன்

வெளிப்புறத் தாழ்ப்பாள் முன்னே
கரிச்சுருள் கூட்டம் போட்டுக்
குதித்தது அறைக்குள் போக

காகிதம் கரியானாலும்
வெறுமனே விடுமா காதல்.


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 2:22 pm)
பார்வை : 0


மேலே