ஒத்துண்ணல்

இட்டதோர் தாமரைப்பூ
இதழ் விரித்திருத்தல் போலே
வட்டமாய் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்துமில்லை;
வேறுவேறு இருந்து அருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்கம் இல்லை!


கவிஞர் : பாரதிதாசன்(14-Jan-11, 1:39 pm)
பார்வை : 391


பிரபல கவிஞர்கள்

மேலே