முத்து நகையே உன்னை நானறிவேன்

முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ
முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

நிலவும் வானும் நிலமும் நீரும்
ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ?
நீயும் நானும் காணும் உறவு
நெஞ்சை விட்டுச் செல்ல எண்ணுமோ?

முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா

தென்மதுரை மீனாள் தேன் கொடுத்தாள்
சித்திரத்தைப் போலே சீர் கொடுத்தாள்

என் மனதில் ஆட இடம் கொடுத்தாள்
இது தான் சுகமென வரம் கொடுத்தாள்

முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
கையழகு பார்த்தால் பூ எதறகு
கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
கையழகு பார்த்தால் பூ எதறகு
காலழகு பார்த்தால்
காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதெற்கு
காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதெற்கு

முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ


கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 2:17 pm)
பார்வை : 124


மேலே