உன்னை நான் சந்தித்தேன்

உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்

பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்

எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
வந்த மனதை அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 4:29 pm)
பார்வை : 126


பிரபல கவிஞர்கள்

மேலே