புதிய உலகு செய்வாம்

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.

பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
'இது எனதெ'ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி’எனும் மனிதரைச் சிரிப்போம்!

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:00 pm)
பார்வை : 107


பிரபல கவிஞர்கள்

மேலே