தமிழ் கவிஞர்கள்
    >> 
    பாரதிதாசன் 
    >> 
    கொட்டு முரசே
கொட்டு முரசே
எல்லார்க்கும் நல்லின்பம்
எல்லார்க்கும் செல்வங்கள்
எட்டும் விளைந்ததென்று
கொட்டுமுரசே - வாழ்வில்
கட்டுத் தொலைந்ததென்று
கொட்டு முரசே!
இல்லாமை என்னும்பிணி
இல்லாமல் கல்விநலம்
எல்லார்க்கும் என்றுசொல்லி
கொட்டுமுரசே - வாழ்வில்
பொல்லாங்கு தீர்ந்ததென்று
கொட்டு முரசே!
சான்றாண்மை இவ்வுலகில்
தேன்றத் துளிர்த்¢ததமிழ்
மூன்றும் செழித்ததென்று
கொட்டுமுரசே - வாழ்வில்
ஊன்றிய புகழ்சொல்லிக்
கொட்டு முரசே!
ஈன்று புறந்தருதல்
தாயின்கடன்! உழைத்தல்
எல்லார்க்கும் கடனென்று
கொட்டுமுரசே! - வாழ்வில்
தேன்மழை பெய்ததென்று
கொட்டு முரசே!
பிரபல கவிஞர்கள்
 
                            தபு ஷங்கர்
Thabu Shankar
 
                            ஞானக்கூத்தன்
Gnanakoothan
 
                            வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
 
                            கனிமொழி
Kanimozhi
 
                            