பிரியாத உறவோடு

பாதையில் துணையானோம்
பாதியிலே தூரமாகிறோம்...
மனம் திறந்து
திருமணம் புரியவே
சம்மதம் சொன்னோம்..
பிறர் மனம் புரிந்தே
நாம் பிரிந்தோம்....
உறவுகளை சுகமாகவே
நம் உணர்வுகளை சோகமாக்குகிறோம்....
சோகமான
இந்த முடிவும்
சுகமாகும் வரை
பிரியாத உறவோடே காத்திருப்போம்...
மணம்
புரிய
நம் மனம் புரியும்
உறவுகள் வரும் வரையிலே...

எழுதியவர் : எழில் கார்த்தி... (8-Jan-13, 12:25 pm)
பார்வை : 205

மேலே