சின்னயிடை தென்னையில் ஓவியமாய் சாய்ந்துநீ
சின்னக் குயிலொன்று பாடிடும் மெல்லிசையில்
தென்னை இளங்கீற்று தென்றலிலா டும்போதில்
உன்னை நினைத்தெந்தன் உள்ளம் மகிழுது
சின்னயிடை தென்னையில் ஓவியமாய் சாய்ந்துநீ
புன்னகைத்த போதை நினைத்து
சின்னக் குயிலொன்று பாடிடும் மெல்லிசையில்
தென்னை இளங்கீற்று தென்றலிலா டும்போதில்
உன்னை நினைத்தெந்தன் உள்ளம் மகிழுது
சின்னயிடை தென்னையில் தென்றலாய் சாய்ந்தவுன்
புன்னகையை நான்நினைத்த போது
---முதல் வடிவில் மூன்றாம் சீர் மோனை இறுதி இரு அடிகளில் இல்லை
இரண்டாம் வடிவில் அனைத்து அடிகளிலும் மூன்றாம் சீர் மோனை அமைய வடிவமைத்துள்ளேன்
யாப்பார்வலர்களுக்கு பயன் தரலாம்