உழவின்றி உலகில்லை ...! (பொங்கல் கவிதைப் போட்டி )

சில ஆண்டுக்குப் பின் ...

எங்கு பார்த்தாலும் வானுயர்
கண்ணயரும் கட்டிடக்காடு !
கண்ருசிக்கிறது அப்போதே பசிக்கிறது
அங்கு ருசிக்க புசிக்க ஒன்றுமில்லை ...!

ஐநா சபைக் கூட்டம்
அறப்போர் மறப்போர் ஆயுதச்சந்தை
அறிவாளிகளின் விவாதம் தொடங்க
அமெரிக்க அதிபர் பசியால் மயக்கம் ...!

அரசியல்வாதி தோட்ட வீடு
குவியல் குவியலாக பணம்
குதூகலம் இல்லை எவரின் கண்களிலும்
பணம் இல்லாதவர் பிணம் - இன்று
பணம் இருந்தாலும் பசியால் பிணம்
தலைவரின் இறப்பில் புதுமொழி பிறந்தது ..!

நாசா ஆராய்ச்சிக் கூடம்
மரபுமாற்ற விதைகள் கையிருப்பு
விதைக்க நிலமெங்கே - தீவிர தேடல்
வியாழனில் விதைக்கலாம்
பசி மாத்திரை போட்டுக்கொண்டு
விஞ்ஞானி தகவல் ...!

நீர் இன்றி அமையாதுலகு - உழவா
நீர் இன்றியும் அமையாதுலகு !

ஞானம் பிறந்தது எனக்கு - ஞாலத்துக்கு ?

எழுதியவர் : த.மலைமன்னன் (10-Jan-13, 3:51 pm)
பார்வை : 117

மேலே