உழவின்றி உலகில்லை (பொங்கல் கவிதை போட்டி)

உழுது விதைத்து தொழு உரமிட்டு
நீர்பாய்ச்சி கலை எடுத்து காக்கும்
உழவுதான் உலகின் உயர்ந்த உயிர்!

மண்ணும் நீரும்சேர்ந்து மகத்தான நெல்லை
கொடுக்கும் - மண்ணிலே பொன்னை விட புதியதாம்.நெல்லையும் புல்லையும் கல்லையும் கூடகாத்து வளரவைக்கும் பொதுவுடைமை தாயவள்
புதுநெல்லை கொடுக்கும் பொதுவான தாயவள்

உழவின் உயிர் மண்ணும், மனிதனும்

உழும் உழவனுக்கு உகர்ந்தாற்போல் வளையும்
மண்ணாய் இரு மனிதா!

உன்னையே கொஞ்சம் ஆழம் பார்த்தால்
கலப்பை ஓடியும் வீரம் வேண்டும் மனிதா!

அதிகம் விளைச்சலை தந்தாலும் அமைதியாய்
இரு மண்போல் மனிதா!

உன்னை மிதிப் போர்க்கும் உயர்வான
வாழ்வு கொடு மண்போல் மனிதா!

உலகிற்கு உதவி பார் மறையாமல் இருக்கும்
உன் புகழும் மண் போல மனிதா!

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (10-Jan-13, 4:09 pm)
பார்வை : 90

மேலே