இதய வாசல் திறந்திருந்தால் .ஈ எறும்பும் உள்ளே நுழையும்...
இதய வாசல் திறந்திருந்தால்
பழனி குமார்
.ஈ எறும்பும் உள்ளே நுழையும்
ஈகை இரக்கம் வெளியேறும் !
நெஞ்சில் ஈரம் வற்றிவிட்டால்
அள்ளி அள்ளி கொடுப்பவரும்
கிள்ளி எடுத்து தந்திடுவார் !
உள்ளத்தில் காதல் அரும்பினால்
கிளர்ந்த உணர்வுகள் உருபெறும்
தளர்ந்த மனமும் வலுப்பெறும் !
பிணக்கால் பிரிகின்ற உள்ளங்கள்
கலைந்து சென்ற மேகங்களாய்
கிளைகள் முறிந்த மரங்களாகும் !
அறிந்ததை கூறினேன் அடியேன்
அனுபவத்தில் கண்டவன் நான் !
எண்ணத் துளிகளை எழுதினேன்
இதயத்தில் தேங்கிய துளிகளை
வரிகளாய் வடித்து பதிவிட்டேன் !
பழனி குமார்